ஒரு ஃபிகரை உஷார் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? சொல்றேன்.. எல்லாம் கேட்டுக்குங்க..!! மொதல்ல டெயிலி குளிக்கணும்..!! காதலுக்கு கண்ணு வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா மூக்கு இருக்குது..!! அப்புறம் அந்த ஃபிகர் போற எடத்துக்குலாம் வோடஃபோன் நாய் மாதிரி பின்னாலேயே திரியணும்..!! அது அடிக்கிற மொக்கை ஜோக்குக்குலாம் வெக்கமே இல்லாம சிரிக்கணும்..!! பூ.. மழை.. கவிதை.. கழுதைன்னு அந்த ஃபிகருக்கு புடிச்சதுலாம் நமக்கும் புடிக்கும்னு மனசாட்சியே இல்லாம சொல்லணும்..!! முடிஞ்சா அந்த கழுதைல ரெண்டு.. ஸாரி.. கவிதைல ரெண்டு.. எழுதி நீட்டணும்..!! இன்னும் சொல்லிட்டே போகலாம்..!! மொத்தத்துல நாம ரொம்ப நல்லவன்ற மாதிரியே ஒரு ஸீன் போடணும்..!! ஒன்னு மட்டும் சொல்றேங்க.. நல்லவனா கூட இருந்திடலாம்.. ஆனா நல்லவன் மாதிரி ஸீன் போடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..!!
மேல நான் சொன்னதுலாம் ஒண்ணுக்காவாத சப்பை ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு..!! அந்த ஃபிகரு.. அட்டு பீஸா இல்லாம.. கொஞ்சம் அழகான பீஸா இருந்துட்டா.. அவ்வளவுதான்..!! அதை கரெக்ட் பண்ணி காதலிக்க வைக்கிறதை விட.. கர்நாடகாக்காரனை கரெக்ட் பண்ணி காவிரித்தண்ணியை வர வச்சுடலாம்..!! அவ்ளோ கஷ்டம்..!! நம்மோட சேர்ந்து இன்னும் பத்துப்பேரு.. டெயிலி காலைல எந்திரிச்சு குளிக்க ஆரம்பிச்சுடுவானுக..!! காப்பி அடிச்ச கவிதையை அந்த பீஸ்கிட்ட காட்டலாம்னு போனா.. நமக்கு முன்னாடியே நாலஞ்சு பேர் ஷோ ஓட்டிட்டு போயிருப்பானுக..!! ஹெவி காம்பட்டிஷனா இருக்கும்..!! எல்லாருக்கும் அல்வா கொடுத்து.. அந்த பீஸை நம்மைப் பாத்து 'ஐ லவ் யூ..!!' சொல்ல வைக்கிறதுக்குள்ள.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா.. தாவு தீந்துடும்..!!
அப்புறம்.. கரெக்ட் பண்ணின பீஸ் நம்ம கையை விட்டுப் போகாம பாத்துக்குறது இருக்கே.. அது இதெல்லாம் விட பெரிய கஷ்டம்..!! ஆனா.. அது இந்த கதைக்கு தேவையில்லாததால.. கரெக்ட் பண்ற கஷ்டத்தோட நிறுத்திக்குவோம்..!!
என்னை காதலிக்கும் ஒரு ஜீவன் ஆக லேகா எனக்கு கிடைத்ததே எனக்கு அளவிலா சந்தோஷம்..!! அதிலும் அவள் தேவலோக அழகி (அவங்க பேரு ரம்பாவோ.. நமீதாவோல..?) ரேஞ்சுக்கு அம்சமாக இருந்தது எனக்கு டபுள் சந்தோஷம்..!! செருப்பு முதல் செல்போன் வரை அவளே எனக்கு செலவு செய்வது ட்ரிப்பில் சந்தோஷம்..!! அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாக குழி தோண்டிப் புதைப்பது மாதிரி 'லேகாவை கழட்டி விடவேண்டும்' என்று அந்த ஆள் சொன்னது எனக்கு பயங்கர எரிச்சலை கிளப்பி விட்டது. அந்த எரிச்சலை அடக்க முடியாமலே கேட்டேன்.
"என்ன சீனியர்.. வெளையாடுறியா..?"

"வெளையாடுறனா..? சீரியஸா சொல்றேன் ஜூனியர்.. லேகாவை கழட்டி விட்டுடு.."
"யோவ்.. போய்யா..!! ரொம்ப கூலா வந்து அவளை கழட்டி விடுன்னு சொல்ற..? அதுலாம் முடியாது.. அவளை கரெக்ட் பண்றதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா..?"
"ஹாஹா..!! நீ என்ன கஷ்டப்பட்டேன்னு எனக்கு தெரியும் ஜூனியர்.. அந்த ஏழுமலையை எட்டி உதைச்சதை விட.. வேற என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டே..? அவளா வந்தா.. அவளா சிரிச்சா.. அவளா கைகொடுத்தா.. அவளா ஐ லவ் யூ சொன்னா..!! நீ என்ன பண்ணின..?"
"ம்ஹூம்.. அதுலாம் உன்கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது..!! நான் அவளை சின்சியரா லவ் பண்றேன்.. உன் பேச்சை கேட்டு அந்த லவ்வுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது..!!"
"ஜூனியர்.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.. உனக்கு நான் கெடுதல் நெனைப்பேனா..? உனக்கு கெடுதல் பண்ணினா.. அது எனக்கு நானே கெடுதல் பண்ணிக்கிற மாதிரி..!! நீதான் நான்றதை ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!!"
"இருந்துட்டு போ.. நீதான் நானா இருந்துட்டு போ..!! ஆனா.. நான் ஒரு விஷயத்துல கமிட் ஆயிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்..!! அந்த லாஜிக் படி பாத்தா கூட.. உன் பேச்சை நான் கேட்க கூடாது..!!" நான் சீரியசாக சொல்ல,
"என்ன எழவெடுத்த லாஜிக்டா அது..? இங்க பாரு ஜூனியர்.. இந்த மாதிரி படத்துல வர்ற பன்ச் டயலாக்லாம் பேசி.. ஒரு பாழுங்கெணத்துல போய் விழுந்துடாத..!!" சீனியர் நக்கலடித்தார்.
"பாழுங்கெணறா..? யாரை சொல்ற நீ..?"
"லேகாவைத்தான்..!! சரியான ராட்சசி அவ..!! அவளை கட்டிக்கிட்டா.. உன் வாழ்க்கையே நாசமா போயிடும் ஜூனியர்.."
"சும்மா உளறாத சீனியர்.. லேகாவைப் பத்தி உனக்கு என்ன தெரியும்..?"
"ஹாஹா..!! நீ அவளை ஒருவருஷமா லவ்தான் பண்ணிருக்குற.. நான் அடிஷனலா.. அவ கூட இருபத்துநாலு வருஷம் குடும்பம் நடத்தி குப்பை கொட்டிருக்கேன்..!! எனக்கு அவளைப் பத்தி எல்லாம் தெரியும்.. உனக்குத்தான் அவளைப் பத்தி ஒரு எழவும் தெரியாது..!!"
"ஏன் தெரியாது.. நான் என் லேகாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்.. அவளை பத்தி எல்லாம் தெரியும் எனக்கு.."
"ஓஹோ..? அப்போ நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்றியா..?"
"கேளு.."
"லேகாவுக்கு கராத்தே, குங்ஃபூ-லாம் தெரியும்.. அந்த மேட்டர் உனக்கு தெரியுமா..?"
"ம்ஹூம்.. தெரியாது..!!"
"கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுக்குவ..!!" சீனியர் பட்டென சொல்ல, திடுக்கென ஒரு பதற்றம் வந்து என்னை பற்றிக் கொண்டது.
"யோவ்.. எ..என்னய்யா சொல்ற..?" என் வாயிலிருந்து வார்த்தைகள் உதறலாக வெளிப்பட்டன.
"ஆமாம் ஜூனியர்.. சொன்னா நீ நம்பமாட்ட..!! கல்யாணம் ஆன நாள்ல இருந்தே ஆரம்பிச்சுட்டா.. காரணமே இல்லாம கன்னாபின்னான்னு அடி விழும்.. உப்புசப்பு இல்லாத மேட்டருக்குலாம் சப்புசப்புன்னு அறை விழும்..!! டெயிலி அடி உதைதான்..!! இருபத்து நாலு வருஷம்..!! ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்...!! அவகிட்ட அடிவாங்கி அடிவாங்கி.. என் உடம்புலாம் ரணரணமா ஆயிடுச்சு..!! கராத்தேலாம் பரவால ஜூனியர்.. கொஞ்சம் ப்ராக்டீஸ் எடுத்துக்கிட்டா.. சமாளிச்சுடலாம்..!! சில நேரங்கள்ல கையை முறுக்கிட்டு காட்டுத்தனமா அடிப்பா பாரு.. அதைத்தான் தாங்கிக்க முடியாது..!!" சீனியரின் குரலில் எக்கச்சக்க சோகம். பாவமாக இருந்தது.
"என்ன சீனியர்.. இப்படி பயமுறுத்துற..?"

"பயமுறுத்தலைப்பா.. உனக்கு ஃப்யூச்சர்ல வரப்போற ஃப்ராக்ச்சரைப் பத்தி சொல்றேன்..!! உனக்கு தம்மடிக்கிறது புடிக்கும்ல..?"
"ஆமாம்.."
"கல்யாணத்துக்கு அப்புறம் தம்மடிச்சா.. உன் நெஞ்சுலையே ஏறி மிதிப்பா..!!"
"ஐயையோ.. அப்போ தண்ணியடிச்சா..?"
"கு.." சீனியர் சொல்ல ஆரம்பிக்க,
"வேணாம் விடு.. எனக்கு புரிஞ்சு போச்சு..!!" என்றேன் நான் அவசரமாய்.
"ஐயையே.. நான் அதை சொல்லலை..!! 'குடிக்கிறதைப் பத்தி கல்யாணத்துக்கு அப்புறம் நெனச்சே பாக்காதேன்'னு சொல்ல வந்தேன்..!!"
"ஓஹோ..????"
"மொத்தத்துல.. அவளை கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒண்ணுதான்.. கண்ணை தொறந்துக்கிட்டே கன்னி வெடி மேல காலை வைக்கிறதும் ஒண்ணுதான்..!! எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு.. ஒரே டெரர்ர்ரா இருக்கும் ஜூனியர்..!!"
சீனியர் அப்புறமும் கொஞ்ச நேரம் தன் மனைவியிடம் அடிவாங்கின கதையை விரிவாக.. அழுதுகொண்டே சொன்னார். அவர் சொன்னதெல்லாம் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் வேறு வழியில்லாமல் பொறுமையாக கேட்டுக் கொண்டேன். அவர் சொல்லி முடித்ததும் நான் அந்த கேள்வியை கேட்டேன்.
"ஒன்னு கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத..!! அவளோ கஷ்டப்பட்டு.. நீ எதுக்கு அவளோட குடும்பம் நடத்தனும்..? பேசாம டைவர்ஸ் பண்ணிட வேண்டியதுதான..?"
"ஏன்.. நான் உசுரோட இருக்குறது உனக்கு புடிக்கலையா..? நான் அவகிட்ட போய் டைவர்ஸ் கேட்டா.. 'டை (die)' மட்டுந்தான் கெடைக்கும்.. 'வர்ஸ்' கெடைக்காது..!!"
"ஐயையோ.. அவ்ளோ பெரிய ராட்சசியா..?" என்றேன் நான் போலி அதிர்ச்சியுடன்.
"ஆமாம் ஜூனியர்.. ஒரேடியா போட்டுத் தள்ளிடுவா..!!"
"ம்ம்ம்ம்.. நீ சொல்றதுலாம் நம்புறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சீனியர்.. அப்பாவியா இருக்குற என் லேகாவை.. அந்த மாதிரி அடங்கப் பிடாரியா, இமேஜின் கூட பண்ண முடியலை..!!"
"யார் அப்பாவி..? லேகாவா..? அவளைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..? அவ ரெண்டு வருஷம் படிச்ச காலேஜை விட்டுட்டு.. உன் காலேஜ்ல டைரெக்ட் தேர்ட் இயர் வந்து சேர்ந்தாளே.. அதுக்கு என்ன ரீசன்னு தெரியுமா..?"
"அந்த காலேஜ்ல ராகிங் தொல்லை ஜாஸ்தின்னு.."
"அதெல்லாம் சும்மா.. இவளை ராகிங் பண்றாங்களா..? இவ யாரையும் ராகிங் பண்ணாம இருந்தா சரிதான்..!! அவளோட ரவுடித்தனம் தாங்காம.. பழைய காலேஜ்ல இருந்து அவளை தொரத்தி விட்டுட்டாங்க.."
"ரவுடித்தனமா..? என்னய்யா சொல்ற..?" எனக்கு டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது.
"பின்ன..? பழைய காலேஜ்ல ஏழெட்டு பேர் மண்டையை உடைச்சிருக்கா.. அவளைப் போய் அப்பாவின்ற..?"

"அவளைப் பாத்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலையே சீனியர்..?"
"காரணம் இருக்கு ஜூனியர்.. உனக்கு அவளோட சுயரூபம் தெரியலை..!! அவ இப்போ ஒரு வருஷமா.. உடைக்காவிரதத்துல இருக்குறா.. அதான்..!!"
"என்னது..??? உடைக்காவிரதமா..??? உண்ணாவிரதம் தெரியும்.. அதென்ன உடைக்காவிரதம்..?"
"யார் மண்டையையும் ஒரு வருஷத்துக்கு உடைக்கிறது இல்லை' அப்டின்னு ஒரு விரதம்..!!"
"என்னய்யா.. எல்லாம் புதுசு புதுசா சொல்ற..? எதுக்கு அப்படி ஒரு விரதம் இருக்குறா..?"
"சொல்றேன் ஜூனியர்.. இந்த வாரம் அவளுக்கு பர்த்டே வருது.. ஞாபகம் இருக்கா..?"
"ஆமாம்.."
"போன வருஷ பர்த்டே அதுவுமா.. அவளோட பழைய காலேஜ்ல பிரச்னை ஆயிடுச்சு..!! இவ ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரை தூக்கி.. ஒரு பையன் மண்டைல போட்டுட்டா.."
"என்னது..????? மானிட்டரைத் தூக்கி மண்டைல போட்டுட்டாளா..???" கேட்கும்போதே எனக்கு குலை நடுங்கியது.
"ஆமாம்.. அதனாலதான் அவளை காலேஜ்ல இருந்து தொரத்தி விட்டாங்க..!! அவ அப்பாவும், அண்ணனும் 'நீ திருந்தவே மாட்டியா..?'ன்னு அவளை கன்னாபின்னான்னு திட்டிருக்காங்க..!!"
"ம்ம்ம்.."
"அப்போத்தான் அவ அண்ணன் அவளுக்கு ஒரு சேலன்ச் பண்ணிருக்கான்.."
"என்ன..?"
"இன்னும் ஒரு வருஷத்துக்கு யார் மண்டையையும் இவ உடைக்காம இருந்தா.. சொத்துல அவனோட ஷேர்ல பாதியை இவளுக்கு எழுதி வைக்கிறதா..!! இவளும் அந்த சேலஞ்சை அக்சப்ட் பண்ணிட்டு.. இப்போ.."
"உடைக்கா விரதத்துல இருக்குறா..!!"
"ஆமாம்..!!"
"ம்ம்ம்ம்.. ரொம்ப கேவலமான ப்ளாஷ்பேக்கா இருக்கு..!! சொத்துக்காக பலபேர் மண்டையை உடைச்ச கதைலாம் கேட்டிருக்கேன்..!! ஆனா.. யார் மண்டையையும் உடைக்காம விரதம் இருக்குறதை இப்போத்தான் கேள்விப்படுறேன்..!! ஆமாம்.. இந்த மேட்டர்லாம் உனக்கு எப்படி தெரியும்..!!"
"எல்லாம் அவளே சொன்னா.."
"அவளேவா..??"
"ஆமாம் ஜூனியர்.. இந்த பொறந்த நாளோட.. அவளோட அந்த விரதமும் முடியுது..!! அப்புறம் அவளோட கேரக்டர்லாம் கொஞ்சம் கொஞ்சமா உனக்கு தெரிய வரும்.. அப்போ இந்த மேட்டரும் ஒன்னு ஒன்னா வெளில வரும்..!!"

"ம்ம்ம்ம்.. என்னவோ போயா..!! நீ சொல்றதுலாம் நம்புற மாதிரியே இல்ல..!!" நான் இன்னும் நம்பிக்கை இல்லாமல் சொல்ல, சீனியர் கடுப்பானார்.
"அடப்பாவி.. விடிய விடிய கதை கேட்டு.."
"நயன்தாராவுக்கு பிரபுதேவா பெரியப்பான்னு சொல்றேன்றியா..?"
"அதை வேற மாதிரில சொல்வாங்க..?"
"நான் இப்படித்தான் சொல்வேன்.."
"அப்போ.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..?"
"ஆமாம்..!!"
"ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ.. அவ ஏன் உன்னை லவ் பண்றா தெரியுமா..?"
"தெரியுமே.. நான் கொஞ்சம் ஹேண்ட்ஸமா.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சீனியர் எரிச்சலுடன் இடைமறித்தார்.
"ஜூனியர்.. இந்த மெசின்தான் நான் இப்போ கண்டுபிடிச்சேன்..!! கண்ணாடி இருபத்து நாலு வருஷத்துக்கு முன்னாடிலாம் கண்டு பிடிச்சுட்டாங்க..!!"
"சரி.. வேற எதுக்கு என்னை லவ் பண்ணுனான்னு சொல்ற..?"
"ஏன்னா நீ ஒரு அப்பாவி.. அவ சொன்னதுக்குலாம் தலையை ஆட்டுவ.. அவ குணத்துக்கு தோதான ஆளுன்னு அவளுக்கு தெரியும்னு.."
"என்ன சொல்ற நீ..?"
"ம்ம்ம்ம்.. நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவன்னு அவளுக்கு தெரியும்.. அதான் உன்னை லவ் பண்றான்னு சொல்றேன்..!!"
"என்னய்யா ரொம்ப பயமுறுத்துற..?"
"பயமுறுத்தலை ஜூனியர்.. உன் லைஃப்ல வரப்போற கஷ்டத்தை சரி பண்ணிக்க.. இது ஒரு நல்ல சான்ஸ்..!! யூஸ் பண்ணிக்கோன்னு சொல்றேன்.. அவளை கழட்டிவிட்டுடுன்னு சொல்றேன்..!!"
"ம்ம்ம்ம்... சரி..!! எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. நான் கொஞ்சம் யோசிக்கணும்.."
"கொஞ்சம் என்ன.. நெறைய யோசி..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோ.. ஆனா.. நாளைக்குள்ள நம்பிடு..!!" அவர் அந்த மாதிரி சொன்னது எனக்கு காமடியாக இருந்தது. சற்றே கிண்டலான குரலில் கேட்டேன்.
"ஏன் சீனியர்.. லேகா உன்னை அடிக்கிறப்போ.. நெறைய அடி உன் தலைலேயே விழுமோ..?"
"ஆமாம்.. ஏன் கேக்குற..?"

"இல்ல.. எஃபக்ட் தெரியுது..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோன்ற.. அப்புறம் நாளைக்கே நம்பிடுன்ற..!! மூளைல முக்கியமான கேபிள்லாம் கட் ஆன எஃபக்ட்லையே பேசுற நீ..!!"
"ஐயோ ஜூனியர்.. நீதான் அவசரம் புரியாம பேசுற.. இன்னும் நாலு நாள்ல உனக்கு பேராப்பு வரப் போகுது..!! நீ சீக்கிரமா ஒரு முடிவுக்கு வரலை.. என் கதிதான் உனக்கும்..!!"
"ஆமாம்.. இது ஒண்ணை சொல்லிடுயா.. 'பேராப்பு.. பேராப்பு..'ன்னு..!! சரி சரி விடு.. நான் நாளைக்கு என்னோட முடிவை சொல்றேன்..!!"
"ஓகே..!!"
கால் கட் செய்யப்பட்டதும், நான் படியிறங்கி என் ரூமுக்கு வந்தேன். ஜானி 'பப்பரக்கா..!!' என்று படுத்துக் கிடந்தான். தூக்கத்திலும் விடாமல் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான். நான் அவனை கடந்து சென்று, என் ரூமுக்குள் நுழைந்து கொண்டேன். கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டேன்.
ராட்சசி என்று லேகாவை பற்றி சீனியர் சொன்ன மேட்டர்களே, ராட்டினம் போல மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தன. அவர் சொன்ன மாதிரி லேகாவை ஒரு அடங்காப்பிடாரியாக கற்பனை செய்து பார்க்கவே, மனம் மறுத்து மறியல் செய்தது. ஆனால்… அவர் சொன்னது மட்டும் உண்மையாக இருந்துவிட்டால்..???? நினைத்துப் பார்க்கவே உடம்பு பயத்தில் நடுங்கியது..!! சில்லிட்டுப் போன மாதிரி சிலிர்ப்பெழுந்து அடங்கியது..!! காலம் முழுதும் காட்டுத்தனமாய் அடி வாங்கவா அவளைக் கட்டிக் கொள்வது..??
அன்று இரவு லேகாவுடன் கடலை வறுக்கும்போதும், மனம் ஒன்றாமல்.. பட்டும் படாமல்.. கடலை கருகாமலே வறுத்தேன்..!!
அடுத்த நாள் லேகாவிடம் அவளுடைய கடந்தகால வாழ்க்கை பற்றி கேட்க நினைத்தேன். காலேஜ் முடிந்ததும், அவளை அழைத்துக் கொண்டு பீச் சென்றேன் (மொளகா பஜ்ஜி வாங்கி கொடுப்பா.. அஞ்சு மணிக்குலாம் போனா சூடா கிடைக்கும்..). ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடமாக தேடிப் பிடித்து (ஹலோ.. இந்த துப்புற வேலைலாம் வச்சுக்காதீங்க.. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்..!!) நெருக்க்க்க்கமாக அமர்ந்து கொண்டோம். கொஞ்ச நேரம் பொதுவான கதைகள் பேசியவன் மெல்ல மேட்டருக்கு வந்தேன்.
"லேகா.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்.."
"கேளு.. கிஸ் தவிர வேற என்ன வேணா கேளு.." அவள் கிண்டலான குரலில் சொல்ல,
"ஐயயே.. அதெல்லாம் வேணாம்..." என்று நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவளோ பயங்கர டென்ஷன் ஆனாள்.
"என்னது.. ஐயயேவா..? என் கிஸ் உனக்கு ஐயயேவா..? அதுக்குள்ளே நான் சலிச்சு போயிட்டானா..?"
"ஹே.. நான் அப்படி சொல்லவே இல்லையே..?"
"இல்ல இல்ல.. நீ அப்படித்தான் சொன்ன..?"
"நான் எங்கே சொன்னேன்..? நீதான் கிஸ் தரமாட்டேன்னு சொன்ன..?"
"நான் தரமாட்டேன்னு சொன்னா.. நீ விட்டுடுவியா..?? பேசாத போ..!!"
அவள் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டதும் இல்லாமல் வேறுபக்கம் வேறு திருப்பிக் கொண்டாள். நான் தலையை சொறிந்தவாறு தேமே என்று அமர்ந்திருந்தேன். இது என்னடா வம்பா போச்சு..? நான் என்ன பேச நினைத்தேன்.. இவள் என்ன செய்கிறாள்..? ஒரு பேச்சுக்கு ஐயயே என்றது ஒரு குத்தமா..? இதுகளை எல்லாம் காதலித்து..?? ச்சை..!!! இன்னைக்கு மொளகா பஜ்ஜி அவ்வளவுதானா..?? ம்ஹூம்.. விடக்கூடாது..!! மெல்ல எனது கையை அவளது தொடையில் வைத்து அழுத்தினேன்.
"ஸாரிடி லேகாக்குட்டி..!!"
"ப்ச்.. ஒன்னும் வேணாம் போ..!!" அவள் என் கையை தட்டிவிட்டாள்.
"சரி.. உன் ஆசை எனக்கு புரியுது..!! கிஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டுட்ட..!! பரவால.. கிஸ் பண்ணிட்டு போ..!!" சொல்லிக்கொண்டே நான் என் உதடுகளை பிதுக்கி அவள் முகத்துக்கு முன் காட்ட, அவளோ என் உதட்டிலேயே பட்டென அறைந்தாள்.

"ஆசையைப் பாரு.. உன் கிஸ்க்காக இங்க யாரும் தவிச்சுப் போய் கெடக்கலை..!! சரி.. நீ என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு..!!"
"அதுவா..??? அ...அது..."
"ம்ம்ம்.. சொல்லு..!!"
"நீ உன் பழைய காலேஜை விட்டுட்டு ஏன் வந்த..?" நான் பட்டென கேட்டேன்.
"அதான் சொன்னேனே.. ராகிங் ப்ராப்ளம்னு..!!"
"நெஜமாவே ராகிங் ப்ராப்ளம்தானா..?" நான் இப்போது கேள்வியை கொஞ்சம் ஷார்ப்பாக்கினேன்.
"ஆ..ஆமாம்.. ஏன் கேக்குற..?" அவளுடைய பதிலில் இப்போது லேசான தடுமாற்றம்.
"இல்ல.. என் பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சேன்.. அந்த காலேஜ்ல அப்டிலாம் எதுவும் ப்ராப்ளம் இல்லைன்னு கேள்விப்பட்டேன்.. அதான்..!!"
இப்போது லேகா பட்டென அமைதியானாள். என் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தவள், பின்பு தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய செய்கையை கண்டு நான் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய மூக்கு விசும்ப ஆரம்பித்தது. கண்ணீர் வராத கண்களை விரல்களால் துடைத்துக் கொண்டாள். அதற்கே நான் உருகிப் போனேன்.
"ஐயையோ.. என்ன லேகா குட்டி.. இதுக்கு போய் அழுவுற..? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா..?" கேட்டுக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தை பற்ற, அவள் என் கையை விலக்கினாள்.
"ப்ச்.. நீ தப்பாலாம் ஒன்னும் கேக்கலை..!! எனக்குத்தான் பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு..!!"
"ப..பழசா..??? என்னது அது..???" நான் நடுங்கும் குரலில் கேட்டேன்.
"அ..அதை.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை.."
"பரவால்ல லேகா.. சொல்லு..!!"
"நீ எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டியே..?"
"ச்சேச்சே.. நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேண்டா.. சொல்லு..!!"
"எங்க காலேஜ்ல திவாகர்னு ஒரு பையன் இருந்தான் அசோக்..!!" அவள் ஒருமாதிரி சோகமான குரலிலேயே சொன்னாள்.
"சரி..!!" (அவன் மண்டைலதான் மாவுக்கட்டு போட வச்சியா..?)
"ஒண்ணா நம்பர் ரவுடி..!!"
"சரி..!!" (அப்போ நீதான் ரெண்டாம் நம்பரா..?)

"எனக்கும் அவனுக்கும் ஆகாது..!! போன வருஷம் என் பொறந்த நாளுக்கு அவன் என்ன பண்ணினான் தெரியுமா..?"
"என்ன பண்ணினான்..?"
"பர்த்டே கிஃப்டா.. எனக்கு ப்ராவும் ஜட்டியும் பார்சல் அனுப்பிட்டான்..!!"
"ஐயையோ..!! அப்புறம்..??" (அடப்பாவி சீனியர்.. இதை நீ சொல்லவே இல்லையே..?)
"நீயே சொல்லு.. எந்தப் பொண்ணுக்குத்தான் கோவம் வராது..?"
"ம்ம்.. வரும் வரும்..!!" (கோவத்துல நீ என்ன செஞ்ச.. அதை சொல்லு மொதல்ல..)
"அன்னைக்கு அவன் கம்ப்யூட்டர் லேப்ல இருந்தான்.. அவன்கிட்ட போய் ஏன் இப்டி பண்ணினேன்னு கேட்டேன்..!! அதுக்கு அவன்.. 'அப்டித்தாண்டி அனுப்புவேன்.. நாளைக்கு அதை போட்டுக்கிட்டு காலேஜுக்கு வாடி'ன்னு திமிரா சொல்றான்..!! எனக்கு வந்துச்சே கோவம்..??"
"ஐயையோ.. என்ன பண்ணுன..?"
"கைல கெடைச்ச ஒரு மவுஸை எடுத்து அவன் மேல எறிஞ்சுட்டேன்..!!"
"மவுஸா...????" (இவ என்ன புதுசா ஒரு ஐட்டம் சொல்றா..?)
"யெஸ்.. அது.. அது.. இத்துனூண்டு.. சின்ன மவுஸ்தான் அசோக்..!!"
"ஓஹோ..??" (ஆமாம்.. மவுஸ்னா சின்னதாத்தான் இருக்கும்.. மானிட்டர்தான் கொஞ்சம் பெருசா இருக்கும்..)
"அதுக்கே அவனுக்கு மண்டை பொடைச்சுக்கிச்சு..!!"
"ம்ம்..!!" (பொடைச்சுக்கிச்சா.. பொளந்துக்கிச்சாடி..???)
"அதுக்கு.. அதுக்கு... என்னை காலேஜ்ல இருந்து அனுப்பிட்டாங்க அசோக்..!! அவன் அப்பா அந்த காலேஜ் மேனேஜ்மண்ட்ல பெரிய ஆளு..!! எல்லாரும் சேர்ந்து பாலிட்டிக்ஸ் பண்ணி.. என்னை வெளில அனுப்பிட்டாங்க..!! என் படிப்பை ஸ்பாயில் பண்ணிட்டாங்க..!!"
"அச்சச்சோ...!!" (சீனியர்.. நெறைய மேட்டர் நீ என்கிட்டே இருந்து மறைச்சிருக்க..!!)
"நீ கேட்டதும் எனக்கு பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு..!! எனக்கு.. எனக்கு.. அழுகை அழுகையா வருது அசோக்..!!"
அவள் விசும்பிக்கொண்டே, என் தோளில் சாய்ந்து கொண்டாள். அப்புறம் என்ன..? ஆம்பளைங்க அழுதாலே எனக்கு தாங்காது..!! இவள் பெண்.. அதிலும் என் காதலி.. அதிலும் எனக்கு எல்லாம் செலவு செய்யும் காதலி..!! உருகிப் போனேன்..!! அவள் தோள் மீது கை போட்டு என்னுடன் இறுக்கிக் கொண்டேன்.
"ச்சே.. ச்சே..!! யாரோ பண்ணின தப்புக்கு நீ ஏண்டா அழுவுற செல்லம்..? கண்ணை தொடைச்சுக்கோ..!! ப்ச்.. கண்ணை தொடைச்சுக்கோன்னு சொல்றேன்ல..? அழக்கூடாது..!!"
அவள் அப்புறமும் கொஞ்ச நேரம் என் தோளில் சாய்ந்து விசும்பிக்கொண்டே கிடந்தாள். நான் அவளை மென்மையாக அணைத்துக்கொண்டு அவளுடைய முதுகை இதமாய் தடவிக் கொடுத்தேன். ஓரிரு நிமிடங்கள்..!! அப்புறம் லேகா பட்டென எழுந்தாள். அதுவரை அங்கே நடந்ததுக்கு சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்.

"மொளகா பஜ்ஜி சாப்பிடலாமா அசோக்..?"
'என்ன இது.. திடீரென மொளகா பஜ்ஜி சாப்பிடலாம் என்கிறாள்' என்று எனக்கு ஒரு அவசர யோசனை வந்தாலும், 'சரி.. மொளகா பஜ்ஜிதானே சாப்பிடலாம் என்கிறாள்..? இன்னைக்கு தொட்டுக்க காரசட்னி வச்சிருப்பானா..? இல்ல.. புதினா சட்னி வச்சிருப்பானா..?' என படாரென்று வேறு மாதிரி யோசனையில் மூழ்க ஆரம்பித்தேன். உடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.
"பஜ்ஜிதான..? சாப்பிடலாம் லேகாக்குட்டி..!!" என்று இளித்தவாறே சொன்னேன்.
லேகாவுடன் ஊர் சுற்றிவிட்டு, என் ரூமுக்கு வந்து சேர இரவு எட்டு மணி ஆகிவிட்டது. வந்து சேரவும், என் வயிறு கலக்கவும் சரியாக இருந்தது..!! எல்லாம் பீச்சில் சாப்பிட்ட அந்த மொளகா பஜ்ஜி செய்த வேலை..!! அவசர அவசரமாய் பேன்ட் கழட்டிப் போட்டுவிட்டு, லுங்கிக்கு மாறினேன். தம் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டேன்..!! கொஞ்ச நேரம்... கண்கள் மூடி... சுகமாக... புகை விட்டபடி..!!
"இந்த நிமிடம்.. இந்த நிமிடம்.. இப்படியே உறையாதா........"
வெளியே இருந்து என்னுடைய செல்போனின் ரிங்டோன் சத்தமாக கேட்டது. 'ச்சே.. நேரம் கெட்ட நேரத்தில் யார் அது..?' என்று எரிச்சலாக இருந்தது. ஆனால் எழுந்து செல்லவும் மனமில்லை. ஆனது ஆயி'ப்போச்சு..!!!! இன்னும் அஞ்சு நிமிஷம் என்று தோன்றியது..!!!! 'யாராக இருக்கும்..?' என்று ஒரு யோசனை ஓடியது. அப்புறம் 'யாராக இருந்தால் என்ன..? வெளியே சென்று மிஸ்ட் கால் கொடுத்தால் திரும்ப கால் செய்யப் போகிறார்கள்..!!' என்று நினைத்தவனாய், சிகரெட் முனையில் வாய் வைத்து, அதன் புகையை அடிவயிறு வரை உள்ளிழுத்தேன்.
திடீரென ரிங்டோன் சத்தம் நின்றது. யாரோ பிக்கப் செய்கிறார்களோ என்று நான் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, கால்சென்டர் எக்சிகியூட்டிவ் தோரணையில் ஜானியின் குரல் கேட்டது.
"ஹலோ.. சொல்லுங்க ஸார்..!! யார் வேணும் உங்களுக்கு..??"
'ஐயையோ.. இந்த லூசு எதுக்கு எனக்கு வந்த காலை பிக்கப் பண்ணுது..?' என்று நான் டாய்லட்டுக்குள் புகைந்தவாறும், புகைத்தவாறும் இருக்க, அவன் செல்போனில் தொடர்ந்து பேசினான்.
"அவர் இப்போ கொஞ்சம் பிஸியா டாய்லட் போயிட்டு இருக்காரு..!!" (அடச்சே.. என் மானத்தை வாங்குறதுக்குனே வந்து தொலைச்சிருக்குது இந்த நாய்..!!)
""
"நான் அவரோட உயிர் நண்பன் ஸார்.. என்ன மேட்டர்னாலும் எங்கிட்ட நம்பி சொல்லலாம்..!! அவர் டாய்லட்ல இருந்து வெளில வந்ததும் நான் சொல்லிர்றேன்..!!"
""
"ஹையோ.. பரவால்ல ஸார்.. சொல்லுங்க..!! நீங்க என்ன முக்கியமான விஷயம் பேசினாலும்.. அவர் எப்படியும் எங்கிட்ட சொல்லத்தான் போறாரு.. அதை நீங்களே சொல்லிடுங்களேன்..!! உங்க பேரு என்ன ஸார்..?"
""
"ஓ..!! உங்க பேரும் அசோக்தானா..?"
ஜானி அங்கு ஆச்சரியமாக கேட்க, எனக்கு இங்கு சிகரெட் புகை குப்பென்று நாசிக்குள் ஏறியது. கண்கள் எரிந்து உடனடியாய் நீர் கொட்ட, 'லொக்.. லொக்.. லொக்..' என இருமினேன். அவசர அவசரமாய்.. சிகரெட்டை சிங்க்குக்குள் போட்டுவிட்டு.. தண்ணியை பின்னால் ஊற்றி விட்டு.. டாய்லட் கதவை திறந்து வெளியே வந்தேன்..!!
"என்ன பாஸ்.. இவ்வளவு நெருங்கிட்டோம்.. அந்த முக்கியமான விஷயம் என்னன்னு சொல்ல மாட்டேன்றீங்களே..?" இளித்தவாறு பேசிக்கொண்டிருந்த ஜானியிடம் இருந்து செல்போனை பட்டென பறித்தேன். பறித்த வேகத்தில், பயங்கர கடுப்புடன் அவனை முறைத்தேன்.
"மசுரு.. இப்போ எதுக்குடா எனக்கு வந்த காலை பிக்கப் பண்ணின..?"

"இல்ல மச்சி.. இது கத்தினு கெடந்தது.. நீ வேற கக்கா போயிட்டுருந்த..!! அதான் எடுத்தேன்... யாரு மச்சி இந்த அசோக்..??" அவன் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் கேட்க,
"த்தா.. மடக்..!! போயிருடா..!! அப்டியே ஏறி மிதிச்சுடுவேன்..!!" நான் கத்தினேன்.
அவன் அப்புறமும் அசட்டுத்தனமாய் ஒருமுறை என்னைப் பார்த்து இளித்துவிட்டு, வெளியேறினான். அவன் சென்றதும் நான் கதவை அறைந்து சாத்தினேன். தாழ்ப்பாள் போட்டேன். அவனை அடித்து துரத்தியதில், ஆத்திரம் சுத்தமாய் குறைந்து போனவனாய், சீனியரிடம் ஜாலியான குரலிலேயே ஆரம்பித்தேன்.
"ஆங்.. சொல்லு சீனி..!!"
"என்னது..?? சீனியா..??" அடுத்த முனையில் சீனியர் ஆச்சரியமான குரலில் கேட்டார்.
"ஆமாம் சீனி.. இனிமே உன்னை சீனினுதான் கூப்பிடனும்னு அவர் சொல்லிருக்காரு..!!"
"யாரு..?"
"இந்தக்கதையை எழுதுற ஸ்க்ரூ..!! சீனியர்னு நீளமா டைப் பண்ண கஷ்டமா இருக்காம்.. அதான் ஷார்ட்டா சீனின்னு கூப்பிட சொல்லிருக்காரு..!!"
"ஓஹோ...? அவரே சொல்லிட்டாரா..? அப்போ நானும் இனிமே உன்னை ஜூனின்னே கூப்பிடுறேன்..!!"
"ஏன்.. உன்கிட்டயும் அந்த ஆளு ஏதாவது சொன்னாரா..?"
"இல்ல இல்ல..!! நீ என்ன விட சின்னப்பையன்.. உன்னை எதுக்கு 'ர்ர்ர்' போட்டு ஜூனியர்னு மரியாதையா கூப்பிடனும்..? அதான்.. இனிமே ஜூனின்னே கூப்பிடுறேன்..!!"
"அய்யைய்யைய்யையோ...!! உன் மொக்கைக்கு, அந்த ஆள் மொக்கையே தேவலாம் போல இருக்கு..!! ச்சை...!! சரி.. மேல சொல்லு..!!"
"அதுசரி.. இப்போ எங்கிட்ட பேசுனது யாரு..? ஜானியா..?"
"ஆமாம்.. அந்த நாயியேதான்..!!"
"ஹ்ஹா.. ரொம்ப நாளுக்கப்புறம் அவன் வாய்ஸை கேக்குறேன் ஜூனி.. ரொம்ப ஹேப்பியா இருந்தது.."
"ம்க்கும்.. ரொம்ப முக்கியம்..!! பெரிய பெப்சி உமா வாய்ஸ்.. கேட்டதும் ஹேப்பியா இருக்குதாம்..!! அப்புறம் சீனி. உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்.."
"என்ன..?"
"இந்த ஜானி நாயி.. ஏதாவது தண்ணி லாரிலையோ.. குப்பை லாரிலையோ.. அடிபட்டு சாகுற மாதிரி.. உன்னால பாஸ்டை சேன்ஜ் பண்ண முடியுமா..?" நான் ஆர்வமாக கேட்க,
"ஐயையோ..!! பாவம் ஜூனி அவன்..!!" அடுத்த முனையில் சீனியர் பதறினார்.
"பாவமா அவன்..? படுத்துறான் சீனி..!! லேகாவை கழட்டி விடுறதுக்கு பதிலா.. இவனை நீ கழட்டிவிட சொன்னேன்னு வச்சுக்கோ.. நான் சந்தோஷமா செய்வேன்..!!"

"அவனை விடு.. அவன் இன்னும் கொஞ்ச நாள்ல.. தானா கழண்டுக்குவான்..!!"
"நெஜமாவா சொல்ற..?" அவர் சொன்னதைக்கேட்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
"ஆமாம்.. அந்த அழகுவேணியோட போய் செட்டில் ஆயிடுவான்..!!"
அழகுவேணி என்றால் எங்கள் ரூமிற்கு அடிக்கடி வருவாளே.. ஜானியின் அத்தை.. அவள்..!!
"ஓ..!! அவன் அத்தையோட போய் செட்டில் ஆகப் போறானா..?"
"ஐயையோ.. அது அவன் அத்தை இல்ல ஜூனி..!! அது ஒரு ஆந்த்ரா ஐட்டம்..!!" சீனியர் சொல்ல, நான் அப்படியே ஷாக்காகிப் போனேன்.
"யோவ்.. என்னய்யா சொல்ற..? ஐட்டமா..??"
"ஆமாம் ஜூனி.. அத்தைன்னு சொல்லி உன்னை நல்லா ஏமாத்திட்டு இருக்குறான்..!! அவன் அவளோட போய் செட்டில் ஆனப்புறந்தான் எனக்கும் அந்த மேட்டர்லாம் தெரிய வந்துச்சு..!!"
சீனியர் சொல்ல சொல்லத்தான் எனக்கு இப்போது நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. அப்படியானால் அந்த அழுக்குவேணி ஒரு ஐட்டமா..? அதனால்தான் நான் வெளியில் செல்லும் நேரம் பார்த்து ரூமுக்கு விசிட் விடுகிறாளா..? நான் ரூமுக்கு திரும்பும் போதெல்லாம் அவளே வந்து கதவை திறக்கிறாளா..? இந்த ஜானி நாய் அழுக்கு தேய்த்து குளித்துக் கொண்டிருக்கிறதா..? பஜனையை முடித்துவிட்டுத்தான்.. பக்திப்பழம் மாதிரி வந்து அமர்ந்து கொள்கிறானா..?
அட படுபாவி.. என்னுடைய சில்லறை சீக்ரட்டுகளை எல்லாம் நோண்டி நோண்டி தெரிந்து கொள்வானே..? நானும் என் ஓட்டை வாயை திறந்து ஒன்னு விடாமல் கொட்டுவேனே..? இரண்டு வருடமாய்.. இவ்வளவு பெரிய சீக்ரட்டை என்னிடம் இருந்து மறைத்து.. அந்த அழுக்கு மூட்டையுடன் ஆட்டம் போட்டிருக்கிறானே..? இந்த ஜானி எவ்வளவே பெரிய கேடியாக இருக்க வேண்டும்..??
"என்ன ஜூனி.. சைலன்ட் ஆயிட்ட..?" சீனியர் என் யோசனையை கலைத்தார்.
"இல்ல சீனி..!! இந்த ஜானி நாயி.. என்னை எவ்ளோ கேனையனாக்கிருக்கான்னு யோசிச்சுட்டு இருந்தேன்..!!"
"ஐயோ.. அதை விடுப்பா.. நாம லேகா மேட்டருக்கு வருவோம்..!!
"ம்ம்ம்.. சொல்லு..!!"
"நான் சொன்னதை யோசிச்சியா..? இன்னைக்கு முடிவு சொல்றேன்னு சொன்னியே.."
"சீனி.. ஆக்சுவலா நான் உன்மேல ரொம்ப கோவமா இருக்கேன்.. நீ எங்கிட்ட இருந்து நெறைய விஷயத்தை மறைச்சுட்ட..!!"
"என்ன சொல்ற நீ..? நான் என்ன மறைச்சுட்டேன்..!!"
நான் சொல்ல ஆரம்பித்தேன். அன்று மாலை நடந்த விஷயங்களை சொன்னேன்..!! மொத்த மேட்டரையும்.. மொளகா பஜ்ஜி மொதற்கொண்டு ..!! எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட சீனியர், நான் முடித்ததும் சற்றே நக்கலான குரலில் கேட்டார்.
"ஸோ.. மொளகா பஜ்ஜி வாங்கிக்கொடுத்து.. உன் தலைல நல்லா மொளகா அறைச்சுட்டான்னு சொல்லு.."
"என்ன சீனி இப்படி கேவலமா சொல்லிட்ட..?"

"பின்ன என்ன..? அவளும் கதை வுட்ருக்கா.. நீயும் காரசட்னியை நக்கிக்கிட்டே கேட்டுட்டு வந்திருக்க..?" சீனியரின் நக்கலில் நான் சூடானேன்.
"யோவ்.. அவ கதை வுடலை.. நீதான் கதை வுட்ருக்க..!! அந்த திவாகர் பையனை பத்தி நீ எங்கிட்ட எதுவுமே சொல்லலை..!!"
"ஐயோ ஜூனி.. அவன் அப்பா பெரிய ஆளுதான் நான் ஒத்துக்குறேன்..!! ஆனா.. லேகா நீ நெனைக்கிற மாதிரி லேசுப்பட்ட ஆளு இல்ல..!! இவ மேல தப்பு இல்லைன்னா.. எதுக்காக இந்த மேட்டரை இத்தனை நாள் மறைச்சா..? அதை நீ யோசிச்சு பாத்தியா..?"
"அதான் அவ சொல்றாளே.. அந்த இன்சிடண்டை நெனச்சா.. அவளுக்கு கஷ்டமா இருந்ததுன்னு.."
"மண்டை உடைஞ்சு போன அந்தப் பையந்தான கஷ்டப்படணும்..? மண்டையை உடைச்ச இவளுக்கு என்ன கஷ்டம்..?"
"யோவ்.. அவ பொய் சொல்ற மாதிரி எனக்கு தோணலையா சீனி..!! எவ்வளவு பாவமா பேசினா தெரியுமா..?"
"ஆமாமாம்..!! பாய்ஃபிரண்டா இருக்குறப்போ எல்லாம் பாவமாத்தான் பேசுவாளுக.. புருஷனா ஆனப்புறந்தான் பூரிக்கட்டையாலேயே அடிப்பாளுக..!!" சீனியரின் குரலில் அடிபட்ட வலி தெளிவாக தெரிந்தது.
"என்னவோ போயா..!! எனக்கு ஒரே கொழப்பமா இருக்கு.. யாரை நம்புறதுன்னே தெரியலை..!!" நான் நிஜமாகவே குழம்பிப் போனவனாய் புலம்பினேன்.
"என்னைய நம்பு ஜூனி..!!"
"ஒரு வெண்ணையையும் நான் நம்புற மாதிரி இல்ல..!! நீ, லேகா, இந்த ஜானி நாய், அந்த அழுக்குவேணி.. எல்லாம் சேர்ந்து என்னை காமடி பீஸாக்குறீங்க..!!"
"ஹையோ ஜூனி.. அவங்க வேணா அப்படி பண்ணலாம்.. நான் அப்படி பண்ணுவேனா..? நான்தான் நீ.. நீதான் நான்னு அடிக்கடி மறந்துடுற நீ..!!"
"ம்ம்ம்ம்ம்ம்.. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நான் இன்னும் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் சீனி..!! ஆனா.. உன்னையும் சும்மா சொல்லக்கூடாது.. நீயும் பயங்கரமான ஆளுய்யா..!!" நான் சற்று கடுப்புடனே சொன்னேன்.
"ஏன் அப்படி சொல்ற..?"
"பின்ன என்ன..? லேகா வாங்கிக் கொடுத்த செல்போனையே யூஸ் பண்ணி.. அவளுக்கே ஆப்பு வைக்க ட்ரை பண்றேல..?"
"ஜூனி.. அவ செல்போன் வாங்கிக் கொடுத்தது.. செலவழிச்சது.. எல்லாமே நீ ஒரு அப்பாவின்றதாலதான்..!! அடி தாங்குவேன்றதாலதான்..!! அதை ஏன் இன்னும் நம்பமாட்டேன்ற..?"
"ம்ம்ம்..!! அது சரி... இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்.. அவளை கழட்டி வுடு.. கழட்டி வுடுன்னு கெடந்து குதிக்கிறியே.. இதனால உனக்கு என்ன யூஸ்..? நீதான் வாங்குற அடிலாம் வாங்கி முடிச்சுட்டியே..? இப்போ போய் பாஸ்டை சேன்ஜ் பண்றதால உனக்கு என்ன லாபம்..?"
"அதுக்கு காரணம் இருக்கு ஜூனி..!!"
"என்ன..?"
"இப்போலாம் எனக்கு கண்ணை மூடி தூங்குனா.. கையை மடக்கிக்கிட்டு லேகா குத்துறதுதான் கனவா வருது..!!" சீனியர் ரொம்ப ஃபீலிங்காக சொன்னார்.
"ஐயோ.. பாவம்..!!"

"அந்த அளவுக்கு அவ அடிச்ச அடிலாம் என் மூளையை ஆக்ரமிச்சிருக்கு..!! இதுக்குலாம் ஒரே ஒரு சொல்யூஷன்தான் இருக்கு..!!"
"என்னது அது..?" நானும் இப்போது சற்று ஆர்வமானேன்.
"மெம்மரிஸ்..!!"
"மெம்மரிஸா..? என்ன சொல்ற நீ..?"
"ஆமாம் ஜூனி.. மெம்மரிஸ் அப்டின்றது மனுஷ வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியம்..!!" அவர் சீரியசான குரலில் சொல்ல,
"இரு இரு.. இந்த டயலாக்கை நான் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு...!!" என்று குழப்பமான குரலில் சொன்னேன்.
"எங்க கேட்டிருக்க..?"
"இப்போதான்யா... ரீசண்டா.. ம்ம்ம்ம்ம்ம்... ஆங்... ஞாபகம் வந்துடுச்சு...!!"
"என்ன..?"
"இந்த ஆள் ரீசண்டா எழுதின ஒரு கதைலதான்யா.. 'மாங்கல்யம் தந்துனானே..' ஃபர்ஸ்ட் நைட் ஸீன்ல.."
"அடத்தூ...!! நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்குறேன்.. நீ காமடி பண்ணிட்டு இருக்குற..??" சீனியர் நிஜமாகவே டென்ஷனானார்.
"ஓஹோ..?? அது காமடி.. நீ சொல்றது சீரியஸா..?? சரி சரி.. சொல்லு சொல்லு..!!"
"மெமரிஸ்.. மனுஷ வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியம் ஜூனி.."
"சரி.. அப்புறம்..?"
"லிவிங்.. அதாவது 'வாழ்தல்' அப்டின்றது.. அந்த செகண்ட் மட்டுந்தான்.. அந்த கணம் மட்டுந்தான்..!! அந்த செகண்ட் போனப்புறம்.. உன்னால அதை ஃபீல் பண்ண முடியாது..!! அது அத்தோட முடிஞ்சு போன ஒரு விஷயம்..!!"
"ஐயையையோ.. கொல்றாண்டா..!!"
"ஆனா... 'மெமரிஸ்' அப்டின்றது.. அந்த மாதிரி இல்ல.."
"வேற எந்த மாதிரி..?"
"நூறு வருஷம் நீ வாழ்ந்த வாழ்க்கையை கூட.. மெமரிஸ்குள்ள போட்டு வச்சுக்கலாம்.. எப்போ வேணாலும்.. அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் பட்டுக்கலாம்..!!"
"ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதேன்னு.. ஆட்டோக்ராப்ல சேரன் சைக்கிள் ஓட்டுவாரே.. அந்த மாதிரியா..??"

"ஆமாம்..!! அதனால.. மெமரி இஸ் மோர் வேல்யபில் தேன் லிவிங்..!!"
"ஐயையையோ.. தத்துவம்டா.. தத்துவம்டா..!! சீனி.. நான் ஒன்னு கேக்கவா..?"
"கேளு..!!"
"உனக்கு இப்போ எத்தனை வயசாகுது..?"
"நாப்பத்தஞ்சு..!! ஏன் கேக்குற..?"
"இல்ல.. நாப்பத்தஞ்சு வயசுல நான் லூசாகப் போறேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுயா சீனி..!!
"ப்ச்.. கிண்டல் பண்ணாத ஜூனி..!! நான் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! நீ இப்போ லேகாவை கழட்டி வுட்டேட்டேன்னு வச்சுக்கோ.. அந்தக்காலத்து அனுஷ்காவோ.. ஒரு காஜல் அகர்வாலோ.. அட்லீஸ்ட் தமன்னாவோ... என் வொய்ஃபா வர ஒரு சான்ஸ் இருக்கு...!!"
"ஓ..!! அப்டி வேற உனக்கு கேடுகெட்ட ஆசைலாம் இருக்கா..??"
"எஸ்..!! அவங்களோட நான் வாழ முடியாட்டாலும்.. வாழ்ந்த மாதிரி ஒரு மெமரி.. எனக்கு அப்டேட் ஆகும்..!! அதை நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப் பட்டுக்குவேன்..!! சாகப்போற காலத்துல.. எனக்கு அதை விட வேற என்ன வேணும்..??"
"ம்ம்ம்ம்.. இப்போ புரியுதுய்யா.. நீ ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மெசினை கண்டுபிடிச்சேன்னு..!!"
"ஆனா.. இதுல உனக்கும் பெரிய அட்வான்டேஜ் இருக்கு..!! நான் சொல்றதை கேட்டேன்னா.. நீ ஃப்யூச்சர்ல வாங்கப்போற அடியலாம்.. அவாய்ட் பண்ணலாம்..!!!"
அவர் அப்படி சொன்னதும், நான் ஒரு சில வினாடிகள் சீரியஸாக தின்க் பண்ணினேன். சீனியர் சொல்லுவதும் சரிதான் என்று பட்டது. அவராவது வாழ்ந்து முடித்துவிட்டார். நான் இனிமேல்தான் அவளுடன் வாழவேண்டும். ஐ மீன்.. அடி வாங்க வேண்டும்..!! சீனியர் சொல்வது மாதிரி கேட்டால் அந்த அடி உதைகளை தவிர்க்கலாம் என்று பட்டது. அவருடன் ஒத்துழைப்பதுதான் எனக்கு நல்லது என்று தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னேன்.
"சரி சீனி.. நீ சொல்றதுலாம் எனக்கு புரியுது..!! லேகாவை கழட்டி விடனும்.. அவ்ளோதான.. விடு.. நான் பாத்துக்குறேன்..!!"
"என்ன பண்ணப் போற..?"
"இதுலாம் சப்பை மேட்டர் சீனி.. பொண்ணுகளை கரெக்ட் பண்றதுதான் கஷ்டம்.. கழட்டி விடுறது ரொம்ப ரொம்ப ஈஸி..!! எங்கிட்ட வுடு.. நான் பாத்துக்குறேன்..!! நாளைக்கே அவளை கழட்டி வுடுறேன் பாரு..!!"
"ஓகே ஜூனி..உன் இஷ்டத்துக்கே விடுறேன்.. ஆனா.. டெயிலி நீ என்ன பண்ணினேன்னு.. போன்ல எனக்கு அப்டேட் கொடுக்கணும்..!! நமக்கு இன்னும் மூணு நாள்தான் டைம் இருக்கு.. அதுக்குள்ளே நீ கழட்டி விடனும்.. அதையும் ஞாபகம் வச்சுக்கோ..!!"
"ஓ..!! மூணாவது நாள்தான் அந்த பேராப்பு வரப்போகுதா..??"
"ஆமாம்..!!"
"அது என்னன்னு கொஞ்சம் சொல்லேன்..?"
"ம்ஹூம்.. அதை நான் சொல்ல மாட்டேன்..!! உன் மேல எனக்கு இன்னும் முழுசா நம்பிக்கை வரலை...!! நம்பிக்கை வந்ததும் சொல்றேன்..!!"

"ஓகே சீனி.. விடு..!! வேறென்ன.. நாளைக்கு பேசலாமா..?"
"இரு இரு.. நான் இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்குறேன்..."
"என்ன..?"
"வீடியோ கால்..!!"
"வீடியோ காலா..? என்னய்யா சொல்ற..?"
"இந்த மெசினோட நான் ஒரு கேமரா கனெக்ட் பண்ணிருக்கேன்.. இப்போ நான் அதை ஆன் பண்றேன்.. உன் செல்போன்ல என் மூஞ்சி தெரியுதான்னு பாரு."
"யோவ்.. ஒரு நிமிஷம் இருய்யா.. இதுக்கு ஏதும் எக்ஸ்ட்ரா சார்ஜ் வராதே..?"
"ஐயையே.. ஏன் ஜூனி இவ்வளவு பிசினாரியா இருக்குற நீ..?"
"யோவ்.. ஏன் சொல்லமாட்ட..?? உனக்கென்ன.. கோடிக்கணக்குல அப்பீஸ் வச்சிருக்குற..? நான் கோல்ட்பில்டர் வாங்க கூட வக்கில்லாம இருக்குறேன்..!!"
"சரி சரி விடு.. ரொம்ப ஃபீல் பண்ணாத..!! இதுக்குலாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகாது.. தைரியமா பாரு..!! ம்ம்ம்.. கேமரா ஆன் பண்ணிட்டேன்.. பாரு..!!"
நான் காதோடு வைத்திருந்த செல்போனை இப்போது கையில் எடுத்து பார்த்தேன். ஸ்பீக்கர் மோட் ஆன் செய்தேன். என் செல்போன் திரை எங்கும் எக்கச்சக்கமாய் புள்ளிகள்..!! பின்பு அந்த புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து, சீனியரின் முகம் தெரிந்தது. சற்றே மங்கலாக..!! அப்புறம் அதுவும் மெல்ல மெல்ல தெள்ளத்தெளிவாக ஆனது..!!
"ஹாய் ஜூனி..!!!!!!!" சொல்லிக்கொண்டே சீனியர் கையசைத்தார்.
"சொல்லு சீனி.."
"நான் தெரியிறேனா..?"
"ம்ம்.. தெரியிற தெரியிற..!! ஏன் சீனி... நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத..."
"என்ன..??"
"உன் தலையை எதும் எறும்புப் புத்துக்குள்ள வுட்டுட்டயா..?"
"ஏன் கேக்குற..?"
"இல்ல.. எறும்பு கறும்புன மாதிரி.. மண்டைலாம் ஒரே முள்முள்ளா இருக்குதேன்னு கேட்டேன்..!!"
"நக்கலா..??? 2035ல இந்த ஹேர்ஸ்டைல்தான் ஜூனி.. ஃபேஷன்..!!"

"ஓஹோ..?? அப்புறம்.. உதடு என்ன.. ஒரு ஓரமா வீங்கிருக்கு..??"
"அதுவா..? அது.. லேட்டஸ்டா லேகாட்ட வாங்கினது..!!" சீனியர் தடித்துப் போன தனது உதட்டை தடவிக் கொண்டே சொன்னார்.
"ம்ம்ம்.. உன் மூஞ்சியை பாத்ததும் உன் மேல நம்பிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு சீனி.."
"தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..!! ஓவராலா எப்படி இருக்கு என் மூஞ்சி..?"
"ம்ம்ம்.. சந்தானத்துக்கு சயின்டிஸ்ட் கெட்டப் போட்ட மாதிரி இருக்கு..!!"
"சந்தானமா..? அது யாரு..?"
"நீ மறந்திருப்ப..!! நம்ம ரெண்டு பேருக்கும் அந்த ஆளு படத்தை போட்டுத்தான்.. இந்த ஆளு கதை எழுதிட்டு இருக்குறான்..!!"
"ஓஹோ..??"
"ஓகே சீனி.. உன் மூஞ்சியை பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்.. வேறென்ன..?"
"வேற ஒண்ணுமில்ல ஜூனி..!! நாளைக்கு பேசலாம்.. ஆல் தி பெஸ்ட்..!!"
"ஓகே சீனி.. குட்நைட்.."
"குட்நைட்..!!"
சொல்லிவிட்டு சீனியர் காலை கட் செய்தார். நானும் செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, கட்டிலில் விழுந்தேன். லேகாவை கழட்டி விடுகிறேன் என்று சீனியரிடம் சொல்லியாயிற்று..!! இப்போது அவளை கழட்டி விடவேண்டும்..!! என்ன செய்து கழட்டிவிடுவது..?? குப்புறப் படுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தோம்... நானும்.. என்னோடு சேர்ந்து ஸ்க்ரூவும்..!!
"லேகா.."
"சொல்லு அசோக்.."
"இந்த சீனி தொல்லை தாங்க முடியலை லேகா.."
"என்னடா செல்லம் சொல்றான் அந்த ஆளு..?"
"உன்னை கழட்டி விட சொல்றான்டி செல்லம்.."
"ஹாஹா..!! ம்ம்ம்ம்.. நீ என்ன பண்ணப் போற..?"
"எனக்கு நீ வேணும் லேகா.. இந்த சீனியை ஏதாவது பண்ண முடியாதா..?"

"என்ன பண்ணலாம்..? இந்த மானிட்டரை தூக்கி அவன் மண்டைல போட்டுடலாமா..?" சொல்லிக்கொண்டே லேகா அருகில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை கையில் தூக்கினாள்.
"ம்ம்ம்... போட்டுடு லேகா.. ஒழிஞ்சு போகட்டும்.. இன்னொரு மானிட்டர் இருந்தா.. இந்த ஜானி மண்டைலயும் ஒன்னு போடு லேகா..!!" நான் சொன்னதும் லேகா அந்த மானிட்டரை மேலே உயர்த்தி என் தலையை குறி பார்த்தாள்.
"ஐயையோ.. என்ன லேகா.. என் மேல போட வர்ற..?" நான் பதறிப்போய் கேட்க, அவளுடைய முகம் இப்போது கோரமாய் மாறியது. இதழ்களின் இருபுறமும் இரண்டு பற்கள், வழியும் ரத்தத்துடன் வெளியே நீண்டன. பேய் மாதிரி சிரித்தாள்.
"ஹ்ஹஹாஹ்ஹஹா.... ஹ்ஹஹாஹ்ஹஹா.... சீனி தலைல போட்டா என்ன.. உன் தலைல போட்டா என்ன அசோக்.. ரெண்டு பேருமே ஒரே ஆளுதான..? உன் தலைலேயே போட்டுர்றேன்..!!"
"நோ..!!!! லேகா ப்ளீஸ்... வெயிட்...!!! வேணாம்...!!!!!!!!!" நான் மிரண்டு போய் அலறிக்கொண்டு இருக்கும்போதே, லேகா அந்த மானிட்டரை என் தலையில் போட்டாள்.
நான் பதறியடித்துக் கொண்டு விழித்தேன்..!! ச்சே..!! எல்லாம் கனவா..??? ஷ்ஷ்ஷ்ஷஷ்....!!!!!!!!! ப்பா..!!!!!!!!!!!!! இருதயம் இன்னும் திடுக் திடுக்கென அடித்துக் கொண்டது. அந்த அதிகாலை குளிரிலும், மேனி எங்கும் வியர்த்துக் கொட்டியது. கண்டது கனவு என்ற உண்மை மூளைக்கு உறைத்திருந்தாலும், உடலில் ஏற்பட நடுக்கம் குறைய வெகுநேரம் ஆனது.
நான் படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன். வாட்டர்கேன் திறந்து, மிச்சமிருந்த அத்தனை நீரையும் என் தொண்டைக்குள் ஊற்றினேன். குடலுக்குள் ஜில்லென குளிர்ந்த நீர் பாயவும், உடலில் ஏறியிருந்த படபடப்பு மெல்ல குறைந்தது. இரைத்துக் கொண்டிருந்த மூச்சும் சீரானது. கடவுளே.. என்ன கொடூரமான கனவு இது..?
நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, ஆசுவாசமடைந்து கொண்டிருக்கும்போதே, 'கீகீன்கீங்..!!!' என்று என் செல்போன் சனியன் கத்தி, என் இதயத்துக்கு மீண்டும் ஒரு மினி ஹார்ட் அட்டாக் கொடுத்தது. எனக்கு அந்த மினி அதிர்ச்சியை சமாளிக்க மேலும் இரண்டு வினாடிகள் ஆகின. பின்பு மெல்ல நடந்து சென்று என் செல்போனை எடுத்து பார்த்தேன். லேகாவிடம் இருந்து SMS வந்திருந்தது.
"GOOD MORNING DA PURUSHA..!!!!"
ம்க்கும்..!! காலாங்காத்தால பிசாசு மாதிரி.. கனவுல வந்து.. மானிட்டரை தூக்கி மண்டைல போட்டுட்டு.. மார்னிங் குட்’டா இருக்கணும்னு மெசேஜ் அனுப்புறியா நீ..?? இதுல புருஷன்னு கொஞ்சல் வேற..?? நான் சலித்துக் கொண்டேன்.
தம்மடிக்க வேண்டும் போலிருந்தது. காலையில் வேண்டும் என்று, நேற்று இரவு புத்தக அடுக்குகளுக்கு இடையில் செருகி வைத்த சிகரெட் ஞாபகம் வந்தது. சென்று தேடினேன்.. தேடினேன்.. தேடினேன்..!! காணோம்..!!!!
'ப்ச்..!!!' என்று மீண்டும் சலித்துக் கொண்டேன். 'இந்த ஜானி நாய்தான் எடுத்திருப்பான்.. இவனிடம் இருந்து சிகரெட்டை காப்பாற்ற, எனக்கு தெரிந்த கடைசி இடத்தையும் கண்டு பிடித்துவிட்டானா..? ச்சை.. இந்த நாயின் தொல்லை.. நாளுக்கு நாள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது..!!
எரிச்சலுடன், செல்போனை பாக்கெட்டில் எடுத்து போட்டுக்கொண்டு, என் ரூமை விட்டு வெளியே வந்தேன். பால்கனியில் புகை விட்டபடி ஜானி நிற்பது தெரிந்தது. கீழே எதையோ கூர்மையாக பார்த்துக்கொண்டே, சிகரெட்டை வாயில் வைப்பதும் எடுப்பதுமாய் இருந்தான். நான் மெல்ல அவனை நோக்கி நடந்தேன். அவனை நெருங்கியவன், அவன் அறியாதவாறு, அப்படி எதை பார்க்கிறான் என்று கீழே பார்வையை வீசினேன். கீழே.. வீட்டு வாசலில்.. பிங்கியின் அம்மா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்..!!! அவ்வளவுதான்... எனக்கு வந்த ஆத்திரத்திற்கு.. அவன் பிடரியிலே பட்டென ஒன்று போட்டேன்..!!
"ஆஆஆஆ...!!" என்று கத்தியபடி அவன் திரும்பினான்.
"த்தா.. அப்படி என்னத்தடா வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்குற..?"
"அ..அது ஒண்ணுல்ல மச்சி.. ஆண்ட்டி கோலம் ஒழுங்கா போடுறாங்களான்னு வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்..!!" அவன் திணறலை சமாளித்துக்கொண்டே சொன்னான்.
"ஓஹோ..?? கோலம் ஒழுங்கா போட்டுட்டா.. கோல்ட் மெடல் கொண்டு போய் கொடுக்க போறியா..?"
"ஹிஹி...!!! ஏன்.. கொடுக்க கூடாதா..?"
"நீதான..??? ஒளிச்சு வச்சிருக்குற கோல்ட்பில்டரை.. திருடிக் குடிக்கிற நாயி நீ..!! நீயெல்லாம் கோல்ட் பத்தி பேசாத..!! தம்மை குடு..!!"
"இரு மச்சி.. இன்னொரு பஃப் அடிச்சுக்குறேன்..!!"
சொல்லிக்கொண்டே அவன் சிகரெட்டை வாயில் வைக்க செல்ல, நான் ஒருகையால் அவனுடைய கையை பிடித்து தடுத்தேன். இன்னொரு கையால் அவனுடைய விரல்களுக்குள் செருகியிருந்த சிகரெட்டை பிடுங்கினேன். அப்படியே என்னுடைய வாயில் வைத்து, ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே விட்டேன்.

"த்தா.. பஃப்லாம்.. பாக்கெட்ல இருக்குற காசுல வாங்கி அடிக்கணும்..!! இன்னொரு தடவை என் தம்மை தொட்டேன்னு வச்சுக்கோ.. வாய்க்குள்ள தீயை பொருத்தி போட்ருவேன்..!!"
"என்ன மச்சி.. காலங்காத்தாலேயே ஒரே டென்ஷனா இருக்குற..?"
"ஆமாம்.. கனவுல ஹன்சிகாவோட கட்டிப்புடிச்சு உருண்டேன்.. அதான் ஒரே டென்ன்ன்ன்ன்ஷனா இருக்குறேன்..!! மூடிட்டு போடா..!!"
நான் அவனை திட்டிவிட்டு, அவன் விட்டுவைத்திருந்த சிகரெட்டை, விரல்களுக்கு இடையில் வைத்து உறிஞ்ச ஆரம்பித்தேன். அவன் கொஞ்ச நேரம் அங்கேயே நின்று, என்னையும் சிகரெட்டையும் வெறிக்க வெறிக்க பார்த்தான். அப்புறம் என் பாக்கெட்டில் புடைத்திருந்த செல்போனுக்கு அவனுடைய பார்வை சென்றது. ஒரு அசட்டு இளிப்புடன் கேட்டான்.
"மச்சி.. மொபைல்ல பேலன்ஸ் இருக்குதா..?"
"ஏன் கேக்குற..?"
"அழகுவேணிக்கு ஒரு கால் பண்ணனும்.. பண்ணிக்கவா..?"
"ஏன்..? இன்னைக்கு நீ காலேஜுக்கு லீவ் போடப் போறியா..?"
"ஆமாம் மச்சி.. எப்புடி கரெக்டா கண்டுபிடிச்ச..?"
"மொசப் புடிக்கிற நாயை மூஞ்சைப் பாத்தா தெரியாது..?? நான் காலேஜுக்கு கெளம்புனப்புறம்.. அவளை ரூமுக்கு வர சொல்றதுக்கு..? அப்டித்தான..??"
"அ..அது.. அது..." அவன் இப்போது பதில் சொல்ல திணறினான்.
"ஆமாம்... அவ உனக்கு என்ன முறை வேணுன்னு சொன்ன..?"
"அத்தை.."
"எந்த வழில..?"
"அண்ணா நகர்ல இருந்து அமிஞ்சிக்கரை போற வழில.."
"என்னது..????"
"அங்கதான் அவங்க வூடு இருக்குது..!!"
"த்தா.. உன் பால்ஸ் மேல உனக்கு ஆசை இல்லையா..? ஏறி மிதிச்சேன்.. எகிறிடும் ரெண்டும்..!!"
"ஏன் மச்சி திட்டுற..?"
"எந்த வழில அத்தை முறை வேணும்னு கேட்டேன்டா.. பரதேசி.."

"அ..அது.. அப்பா வழில.."
"தப்பான வழிலன்னு சொல்லு..!!"
"என்ன மச்சி சொல்ற..?"
"நான் சொல்றது உனக்கு புரியலை..??"
"சத்தியமா புரியலை.."
"நடிக்காதடா டேய்..!! அவ உன் அத்தை இல்ல.. ஆந்த்ரா ஐட்டம்னு எனக்கு தெரிஞ்சு போச்சு..!!"
நான் சொன்னதை கேட்டு அவன் பட்டென ஷாக்கானான். ஆடு திருடி அகப்பட்டுக் கொண்டவன் மாதிரி, திருதிருவென விழித்தான். ஆனால் ஓரிரு விநாடிகள்தான்..!! அப்படியே அந்த அதிர்ச்சியை சமாளித்துக் கொண்டு, 'ஈஈஈஈஈஈ...' என இளித்தவாறு கேட்டான்.
"உனக்கு யார் மச்சி சொன்னாங்க..??"
"ம்ம்ம்..?? சன் நியூஸ் சுஜாதா பாபு சொன்னாங்க..!!"
"ந்யூஸ்லையா..???"
"வாயை பொளக்காத..!! ஒருநாள் அதுதான் நடக்கப் போகுது.. உங்க ரெண்டு பேருக்கும்..!! இத்தனை நாளா ரெண்டு பேரும் என்னை கேனையனாக்கிருக்கீங்கள்ல..?"
"சாரி மச்சி..!!"
"உன் சாரியை கொண்டு போய் சாக்கடைல கொட்டு..!! இனிமே இந்த மாதிரி.. அத்தை, சித்தின்னு ஏதாவது.. அழுக்கு டப்பாலாம் ரூமுக்கு கூட்டிட்டு வந்த.. அறைதான் வுழும் மவனே..!! புரிஞ்சதா.?? போ.. போய் குளிச்சுட்டு காலேஜுக்கு கெளம்பு..!!" நான் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சொல்ல,
"சரி மச்சி.." அவன் சோகமாக முகத்தை வைத்தபடி நகர்ந்தான்.
"டேய்.. ஒரு நிமிஷம் இரு.." நான் அழைக்க,
"என்ன மச்சி..?" அவன் திரும்பினான்.
"அவளை மொதல்ல பேரை மாத்த சொல்லு.. அடுப்புக்கரி கொட்டி வைக்கிற அண்டா மாதிரி இருந்துக்கினு.. அழகு வேணியாம்.. அழகு வேணி..!! போ..போ..!!"
அவனை விரட்டிவிட்டு, நான் நிம்மதியாய் புகைக்க ஆரம்பித்தேன். லங்க்சுக்கு புகையை அனுப்பியவாறே, என் லவ்வரை எப்படி கழட்டி விடுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு நான்கைந்து யோசனைகளை தோன்றின. ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து, அதிலேயே பெஸ்டாக தோன்றிய யோசனையை, அன்றே செயல்படுத்த முடிவு செய்தேன்.
அன்று காலேஜில் எங்களுக்கு செகண்ட் ஹவர் எடுக்க வேண்டிய ப்ரொஃபசர் வரவில்லை. ஃப்ரீயாகத்தான் இருந்தோம். நான் அந்த கேப்பில், என்னுடைய ஐடியாவை செயல்படுத்த நினைத்தேன். எங்கள் காலேஜ் லைப்ரரிக்கு பின்புறம் ஒரு பெரிய வேப்பமரம் இருக்கும். அதன் அடியில் மரபென்ச் போட்டிருப்பார்கள். காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து அங்குதான் நாங்கள் கடலை வறுப்பது. இன்றும் அங்கேயே அவளை அழைத்து சென்றேன். முகத்தையும் குரலையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு அவளை அழைத்தேன்.
"லேகா.."

"ம்ம்ம்.."
"உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும்.."
"என்ன..?"
"அ..அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை.."
"தெரியலைன்னா வுட்டுடு.. சொல்லாத..!!"
"ப்ச்..!! என்ன லேகா இப்படி சொல்ற..?"
"பின்ன என்ன..? சொல்ல வந்துட்டேல..? சொல்லு..!!"
"கொஞ்ச நாளாவே இதை உன்கிட்ட சொல்லணும் சொல்லனும்னு நெனைப்பேன்.. ஆனா தைரியம் வராது.."
"சரி இப்போ சொல்லு.."
"அ..அதை சொல்றதுக்கே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு லேகா.."
"ப்ச்.. சொல்லுடா..!!!" இப்போது அவளுடைய குரலில் உஷ்ணம் ஏறியிருந்தது.
"இங்க பாரு.. நான் சொல்றதை நீ புரிஞ்சுப்பேன்னு நம்பிக்கைலதான் சொல்றேன்..!!"
"அடச்சைய்..!!! சொல்லித்தொலைடா சொங்கி..!!" லேகா பொறுமை இழந்து கத்தினாள். இனியும் தாமதித்தால் எரிச்சலில் எழுந்து சென்று விடுவாளோ என்று தோன்றியது. சொல்ல ஆரம்பித்தேன்.
"அது வந்து.. நாம.."
"ம்ம்.. நாம..?"
"நா..நாம.. பி..பிரிஞ்சிடலாம் லேகா..!!" நான் தயங்கி தயங்கி சொல்ல, அவளோ சற்றும் அதிர்ச்சியடையாமல்,
"ஏன்..?" என்று அமைதியாக கேட்டாள்.
"ஏன்னா.. நீ நெனைக்கிற மாதிரி நான் நல்லவன் இல்ல லேகா.. கெட்டவன்..!!"
"என்னது..????" அவள் ஒரு மாதிரி ஏளனமான குரலில் கேட்க,
"நான் கெட்டவன்..!!" திரும்பவும் சொன்னேன்.

அவ்வளவுதான்..!!!!! அவள் எந்த சலனமும் காட்டாமல், எனது முகத்தையே அமைதியாக பார்த்தாள். சில வினாடிகள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்புறம் திடீரென மதன்பாப்புக்கு கிச்சுகிச்சு மூட்டிவிட்டது மாதிரி 'கேக்கேக்கேகேக்கே..!!' என்று சிரிக்க ஆரம்பித்தாள். வாயைப் பொத்திக்கொண்டு.. விழுந்து விழுந்து.. குலுங்கி குலுங்கி..!! எனக்கு எதுவும் புரியவில்லை. அப்பாவியாய் தலையை சொறிந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பரிதாபமான குரலில் கேட்டேன்.
"ஏன் லேகா சிரிக்கிற..?
"ஹ்ஹஹ்ஹ்ஹா... ஹ்ஹஹ்ஹ்ஹா...!! ஐயோ அப்பா.. என்னால முடியலைடா..!! ஹ்ஹஹ்ஹ்ஹா... ஹ்ஹஹ்ஹ்ஹா...!!!!"
"ஏன் சிரிக்கிறேன்னு சொல்லிட்டு சிரி லேகா..!!"
"ஹ்ஹஹ்ஹ்ஹா...!! பின்ன என்ன..? இந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு கெட்டவன்னு சொன்ன பாத்தியா..?? கேக்குறதுக்கு செம காமடியா இருந்தது..!! ஹ்ஹஹ்ஹ்ஹா...!!!"
"சிரிக்காத லேகா.. சீரியஸா சொல்றேன்.. நான் கெட்டவன்..!!" என்னுடைய கட்டுப்பாடு இல்லாமலே, எனது குரல் இப்போது கெஞ்சலாக ஒலித்தது .
"ஐயோ.. போதும் நிறுத்துடா..!! என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை..!!"
"இப்போ எதுக்கு லூசு மாதிரி சிரிக்கிற..? நான்தான் கெட்டவன்னு சொல்றேன்ல..? எனக்கு நெறைய கெட்ட பழக்கம் இருக்குது..!!"
"என்ன.. தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுதான..?"
"அது மட்டுந்தான் உனக்கு தெரியும்.. அதுக்கும் மேல இருக்குது..!!"
"வேற என்ன..? சாக்ஸ் தொவைக்க மாட்ட.. அதை சொல்றியா..?"
"ப்ச்.. அது கெட்ட பழக்கமா..??"
"அப்புறம் என்ன..? ஓ..!! பிட்டுப்படம் பாப்பியா..?"
"ஐயயே.. ச்சீய்.. அதுலாம் இல்ல.."
"அதுவும் இல்லையா..? அப்புறம்..??"
அவளிடம் இப்போது ஆர்வம் வந்திருக்க, நான் ஓரிரு வினாடிகள் அமைதியாக இருந்தேன். அப்புறம் தமிழ்பட வில்லன்கள் ரேஞ்சுக்கு கொடூரமான வாய்சில் சொன்னேன்.
"பொண்ணுக கூட பழக்கம் இருக்குது.. ஒன்னு ரெண்டு இல்ல.. எக்கச்சக்கமா..!! நெறைய பொண்ணுக கூட செக்ஸ் வச்சிருக்கேன்.. நான் ஒரு காமவெறியன்..!! போதுமா..?"
நான் படபடவென சொல்ல, லேகா இப்போது பட்டென அமைதியானாள். அவளுடைய சிரிப்பு இப்போது முழுமையாக அடங்கிப் போயிருந்தது. என் கண்களையே ஒருமாதிரி கூர்மையாக பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.
"இல்ல.. நீ பொய் சொல்ற..!!"
"பொய் சொல்றனா..? எப்படி சொல்ற..?" நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.

"உன் கண்ணைப் பாத்து சொல்றேன்..!! பொய் சொன்னா கண்ணுல தெரியும்..!!"
அவ்வளவு சொல்லியும் அவள் நம்பாமல் போகவே, நான் பயங்கர கடுப்பானேன். எரிச்சலும், சலிப்புமாய் சொன்னேன்.
"ஆமாம்.. ஆ ஊ ன்னா இதை ஒன்னை சொல்லிடுங்க..!! பொய் சொன்னா கண்ணுல தெரியும்னு..!! அப்போ உண்மை சொன்னா எதுல தெரியும்னு சொல்லு.. அதை காட்டுறேன்..!!"
"ச்சை.. அசிங்கமா பேசாத அசோக்.."
"நான் அசிங்கமா பேசுறனா..? நீதான் அறிவில்லாம பேசுற..!! நல்லவன் மாதிரி நடிச்சு நெறைய பொண்ணுகளை அனுபவிச்சிருக்கேன்..!! ஆனா.. உன்னைப்பாத்தா எனக்கு கொஞ்சம் பாவமா இருக்கு.. அதான் மனசு உறுத்தல் தாங்காம.. உண்மையை சொல்லிட்டேன்..!!"
நான் சொல்ல, இப்போது அவள் சற்றே யோசித்தாள். கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்புறம் நிதானமாக குரலில் கேட்டாள்.
"ஓஹோ..?? ம்ம்ம்ம்ம்ம்.. ஓகேடா..!! நீ சொல்றது உண்மைனே வச்சுப்போம்..!! நான் ஒருசில கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்றியா..?"
"கேளு..!!"
"இவ்வளவு நாள் என்கிட்டே நடிச்சுட்டு.. திடீர்னு எதுக்கு இப்போ வந்து உண்மையை சொல்ற..?" அவளுடைய அந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.
"அ..அது அது.." என திணறினேன்.
"ம்ம்.. சொல்லு..!!" அவள் அவசரப் படுத்தினாள். யோசிக்க நேரமில்லாமல் நான் உளறினேன்.
"ஆங்..!! நேத்து என் பாட்டி கனவுல வந்து திட்டினாங்க..!!"
"என்ன திட்டினாங்க..?"
"உனக்குலாம் மானிட்டரே இல்லையாடான்னு.."
"என்னது..????"
"ஐயயோ..!! ஸாரி.. மனசாட்சியே இல்லையான்னு திட்டுனாங்க..!!"
"உன் பாட்டி பேர் என்ன..?" அவள் பட்டென அடுத்த கேள்வியை வீசினாள்.
"ம்ம்.. தீபிகா படுகோனே..!!"
"ப்ச்..!! சொல்லுடா..!!"
"பாட்டி பேர்லாம் ஏன் கேக்குற..?"

"இதோ.. இப்படி திணர்ற பாத்தியா.. அதுக்குத்தான்..!!"
"நான்லாம் ஒன்னும் திணறலை..!! என் பாட்டி பேரு... ம்ம்ம்... ஆங்..!! அழகுவேணி..!!"
"சரி.. லாஸ்டா.. எப்போ, எந்த பொண்ணோட, எந்த சிச்சுவேஷன்ல செக்ஸ் வச்சுக்கிட்ட..? படபடன்னு சொல்லு பார்ப்போம்..!!"
"அ..அது.. அது..."
நான் வகையாக மாட்டிக்கொண்டேன் என்று எனக்கு இப்போது புரிந்து போனது. திணறினேன். திருதிருவென விழித்தேன். திடீரென்று எப்படி ஒரு கட்டுகதையை அவிழ்த்து விடுவது..? அவள் இப்போது என்னைப் பார்த்து ஏளனமாக சொன்னாள்.
"ம்ம்.. பாத்தியா..? சொல்ல முடியலை பாத்தியா..?? அதான் சொன்னேன்.. நீ பொய் சொல்றேன்னு..!!"
"அதுலாம் ஒண்ணுல்ல.. ஒன்னு ரெண்டுணா ஞாபகம் இருக்கும்.. எக்கச்சக்கமா ஆகிப் போச்சா..? ஒழுங்கா ஞாபகத்துக்கு வர மாட்டேன்னுது..!!"
நான் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது மாதிரி மழுப்பலாக சொன்னேன். லேகா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் என் முகத்தையே காதலுடனும், கனிவுடனும் பார்த்தாள். அப்புறம் உதட்டில் மெல்லிய புன்னகையை கசியவிட்டவள், ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தாள். இதமான குரலில் சொன்னாள்.
"நீ ஏன் இப்படிலாம் பேசுறேன்னு எனக்கு புரியுது அசோக்..!!"
"ஏன் இப்படி பேசுறேன்..?" (எனக்கே ஒன்னும் புரியலை.. இவளுக்கு என்ன புரிஞ்சது..?)
"புரியுதுன்னு சொல்றேன்ல..? உன் மனசை உன்னைவிட நான் நல்லா புரிஞ்சு வச்சுக்குறேன்..!!"
"ஓஹோ..???"
"ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ..!! நீ நெஜமாவே அந்த மாதிரி.. பொம்பளைப் பொறுக்கியா இருந்தா கூட.. எத்தனை பொண்ணுக கூட உனக்கு பழக்கம் இருந்திருந்தா கூட.. எனக்கு கவலை இல்ல..!! என்னை கட்டிக்கிட்டதுக்கு அப்புறம்.. எனக்கு ஒரு நல்ல புருஷனா இருந்தா.. அது போதும் எனக்கு..!! உன் கடந்த காலம் பத்திலாம் எனக்கு அக்கறை இல்லை..!! புரிஞ்சதா..? ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!"
உருக்கமாக பேசியவள், காலேஜ் என்பதையும் மறந்து என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். உதடுகளை குவித்து என் மார்பில் இதமாக முத்தமிட்டாள். அங்கேயே முகம் சாய்த்து, தன் விழிகளை மூடிக் கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..!! நான் நினைத்தது ஒன்று.. நடந்தது வேறு..!! அவளை கழட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பொய் சொன்னால், அவளோ தன் காதலால் என்னை கவிழ்த்து விட்டாள். என் மீது லேகாவுக்கு இவ்வளவு காதலா..?? எனக்கே ஆச்சரியமாக இருந்தது..!! அவளை மென்மையாக, ஆறுதலாக அணைத்துக் கொண்டேன். 'டேய் சீனி..!!!!' என்று பற்களை கடித்துக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது..!!
ஆனால் அப்போது கத்தவில்லை. அடக்கிக்கொண்டேன். அன்று இரவு சீனியர் கால் செய்யும்போது கத்தினேன். காட்டுத்தனமாய் நான் கத்தியதில் அவர் மிரண்டு போனார்.
"ஆஆஅ...!! ஏன் கத்துற ஜூனி.. காது வலிக்குது...!!"
"பின்ன என்னய்யா..? நான் பாட்டுக்கு ஜாலியா லவ் பண்ணிட்டு இருந்தேன்.. இப்படி சனியன் மாதிரி என் லைஃப்ல வந்து.. எல்லாத்தையும் ஒழப்பிட்டியேயா..!! ச்சே.. என் நிம்மதியே போச்சு..!!"
"ஜூனி.. டென்ஷன் ஆகாம மேட்டர் என்னன்னு சொல்லு..!!"
நான் சீனியரிடம் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் ஒப்பித்தேன். லேகாவை கழட்டி விட நான் சொன்ன பொய்யும், அந்த பொய் புஸ்வானமாய் போய் சேர்ந்த கதையையும் சுருக்கமாக சொன்னேன். அதை பொறுமையாக கேட்ட சீனியர், அப்புறம் சற்றே யோசனையான குரலில் சொன்னார்.
"ம்ம்ம்ம்... உன்னோட ஐடியா நல்ல ஐடியாதான்.. ஆனா ஃபினிஷிங்தான் ராங்கா போயிடுச்சு..!! சரி விடு.. வேற ஏதாவது ஐடியா யோசிக்கலாம்..!!"

"யோவ்.. போய்யா..!! இனிமே நான் நீ சொல்றதை கேக்கப் போறது இல்ல.. நீ என்னை விட்ரு..!! லேகா என்னை எவ்ளோ லவ் பண்றான்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. அவ எனக்கு வேணும்..!!"
"புரியாம பேசாத ஜூனி..!! லவ் பண்ற வரைக்கும் எனக்கும் லேகாவுக்கும் எந்த பிரச்னையும் வரலை.. அவ பொண்டாட்டியா வந்தப்புறந்தான் பிரச்னை ஸ்டார்ட் ஆச்சு..!! அது மாதிரிதான்.. உனக்கு இப்போ இது சந்தோஷமா இருக்கும்.. ஆனா ஃப்யூச்சர்ல இதுக்காக நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ..!! இப்போ உனக்கு கிடைக்கிற மொளகா பஜ்ஜிக்கு ஆசைப்பட்டா.. அப்புறம் அவ மொத்து மொத்துன்னு மொத்துறதையும் வாங்கித்தான் ஆகணும்.. இப்போ உனக்கு கிடைக்கிற பிரியாணிக்கு ஆசைப்பட்டா.. பின்னாடி அவ உன்னை பிரிச்சு மேயுறதையும் தாங்கித்தான் ஆகணும்..!! இந்தமாதிரி சின்ன சின்ன மேட்டருக்கு ஆசைப்பட்டு.. ஃப்யூச்சர்ல பெருசு பெருசா வாங்கிக் கட்டிக்காத..!!"
"என்னவோ சீனி.. நீ லேகா பத்தி சொல்றதெல்லாம்.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது..!!"
நான் நம்பிக்கையற்றவனாய் சொல்ல, சீனியர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். எதையோ தீவிரமாக யோசிக்கிறார் போல தோன்றியது. அப்புறம் லேசான தொண்டை செருமலுடன் அவருடைய குரல் ஒலித்தது.
"இங்க பாரு ஜூனி..!! இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலைன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!! நம்பிக்கை இல்லாம நீ இந்த வேலையை செஞ்சா.. நான் நெனச்சதை நெறைவேத்த முடியாது..!! ஓகே.. நாம இப்போ ஒரு முடிவுக்கு வந்தாகணும்..!! நான் சொல்றதை கவனமா கேளு ஜூனி.. நான் இப்போ கால் கட் பண்றேன்.. உனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் தர்றேன்..!! நல்லா யோசி..!! பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் நான் கால் பண்றேன்.. என் மேல உனக்கு முழு நம்பிக்கை வந்தா.. காலை பிக்கப் பண்ணு.. இல்லனா வேணாம்..!! ஒருவேளை நீ பிக்கப் பண்ணலேன்னா.. அப்புறம் நான் உனக்கு கால் பண்ணவே மாட்டேன்.. உனக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்..!! நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு..!! ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.. என்னை நீ நம்ப மாட்டேன்னு சொல்றது.. உன்னையே நீ நம்ப மாட்டேன்னு சொல்றது மாதிரி.. !! நீ தப்பான முடிவெடுத்தா.. அதனால என்னை விட அதிகமா பாதிக்கப்படப் போறது நீதான்..!! இதைலாம் ஞாபகம் வச்சுக்கிட்டு நல்ல முடிவா எடு..!! ஓகே..??"
சீரியசான குரலில் சொன்ன சீனியர், காலை கட் செய்தார். இருண்டு போன செல்போன் திரையையே, இமைக்காமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனியர் சொன்ன வார்த்தைகளே மனதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளில் இருந்த நியாயம் மெல்ல மெல்ல புரிந்தது. அவர்தான் நான் என்று நிரூபித்து விட்ட பின்பும், அவரை நம்பாமல் நான் இருப்பது முட்டாள்த்தனம் என்று தோன்றியது. லேகாவை நான் நம்புவது அப்புறம் இருக்கட்டும்.. முதலில் என்னையே நான் நம்பாமல் இருந்தால் எப்படி..???
தீவிரமான யோசனைகளிலேயே பத்து நிமிடங்கள் கழிந்தன. சில நொடிகளில் சீனியரிடம் இருந்து திரும்பவும் கால் வந்தது. நான் எடுக்கலாமா வேண்டாமா என்று ஐந்தாறு வினாடிகள் யோசித்தேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், என் கட்டை விரல் நகர்த்தி கால் பிக்கப் செய்தேன். காதில் வைத்தேன். நன்றியில் நனைந்த குரலாய் சீனியரின் குரல் ஒலித்தது.
"தேங்க்ஸ் ஜூனி..!!!"
"பரவால்ல சீனி.."
"இப்போ என்னை முழுசா நம்புறேல..?"
"நம்புறேன் நம்புறேன்.. வேற வழி..?? சொல்லு.. நான் என்ன பண்ணனும்..!!"
"ஓகே.. ஓகே.. மேட்டருக்கு வருவோம்..!! நாளைக்கு லேகாகிட்ட இன்னொரு பொய் சொல்லி.. அவளை கழட்டி விடலாமான்னு பாரு.."
"நான் என்ன சாலமன் பாப்பையாவா..? தினம் ஒரு திருக்குறள் மாதிரி.. டெயிலி ஒரு டூப்பு விட சொல்ற..? இனிமேலாம் அவளை பொய் சொல்லி கழட்டி விட முடியாது..!! அவ நம்ப மாட்டா..!!"
"ஏன்..???"
"நான் பொய் சொன்னா.. அவ என் கண்ணைப் பாத்தே கண்டு பிடிச்சுடுறாய்யா..!!"
"பொய் சொன்னா கண்டு பிடிச்சிடுறாளா..? ச்சை.. எங்கயோ போலீஸ் வேலைல சேர வேண்டியதுலாம்.. பொண்டாட்டியாகி நம்ம உசுரை வாங்குதுகப்பா..!!"
"இனிமே நீ சொல்ற ஐடியாவைத்தான் நான் அப்டியே ஃபால்லோ பண்ணப் போறேன் சீனி.. அவளை கழட்டி விட என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..!!"
"ம்ம்ம்ம்... அப்படியா சொல்ற..? ம்ம்ம்ம்..." சொன்ன சீனியர் யோசனையில் ஆழ்ந்தார். அப்புறம் ஏதோ ஐடியா வந்தவர் போல சொன்னார்.
"ஒரு நிமிஷம் இரு ஜூனி.. வந்துர்றேன்.."
சீனியருடன் வீடியோ கால்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எழுந்து செல்ல, என்னுடைய செல்போன் வெறும் சேரை மட்டும் இப்போது காட்டியது. ஓரிரு நிமிடங்கள்..!! அப்புறம் சீனியர் அந்த புத்தகத்துடன் அந்த சேரில் வந்து அமர்ந்தார். இல்லை இல்லை.. அது புத்தகம் இல்லை.. டைரி..!! என்னுடைய இந்த வருட டைரியாகத்தான் இருக்க வேண்டும். இதோ.. என் அறையில் புத்தம் புதிதாக இருக்கும் இதே டைரி, சீனியரின் கையில் பழுப்பேறிப் போய் பழசாய்..!! சீனியரிடம் ஆர்வமாக கேட்டேன்.

"சீனி.. அது நம்ம 2011 டைரிதான..?"
"ஆமாம் ஜூனி.. இதுல நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.. ஏதாவது ஐடியா கெடைக்குதான்னு பாக்கலாம்..!!"
சீனியர் சொல்லிவிட்டு டைரியில் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பித்தார். நான் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நாளைக்கு அந்த டைரியில் நான் எழுதப் போவதை, இப்போது சீனியர் என் கண்முன்னே வாசித்துக் கொண்டிருந்தார். வாசிக்க வாசிக்க, காக்காவுக்கு மேக்கப் போட்டிருந்த மாதிரியான அவருடைய முகம் மேலும் கருத்தது. ஒருமாதிரி கவலை தோய்ந்த முகத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தார்.
"என்னாச்சு சீனி..?" நானும் அவருடைய கவலை தொற்றிக் கொண்டவனாய் கேட்டேன்.
"நாளைக்கு ரொம்ப ரொம்ப டேஞ்சரான நாள் ஜூனி.." அவர் சொல்ல,
"என்னய்யா சொல்ற..?" இப்போது என்னையும் லேசாக பதற்றம் பற்றிக் கொண்டது.
"இப்போ இதை படிச்சதும்தான் எனக்கு நெறைய விஷயம் புரியுது.."
"என்ன புரியுது..?"
"இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு பேராப்பு வரப் போகுதுல..?"
"வரப்போகுதுன்னு முடிவே பண்ணிட்டியா..? சரி சொல்லு..!!"
"அந்த பேராப்புக்கு புள்ளையார் சுழி போட்ட மேட்டர் நாளைக்குத்தான் நடக்கப் போகுது..!!"
"யோவ்.. இது காமடி கதைன்ற நெனைப்பு கொஞ்சமாவது உங்களுக்கு இதுக்குதாயா..? ஏதோ.. பெரிய த்ரில்லர் ஸ்டோரி ரேஞ்சுக்கு.. இந்த பில்டப்பு கொடுக்குறீங்களே..? நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுய்யா..!!"
"என்ன நடக்கப் போகுதுன்றது முக்கியம் இல்ல ஜூனி.. அதை நாம எப்படி அவாய்ட் பண்றோம்ன்றதுதான் முக்கியம்..!!"
"சரி.. அதை எப்படி அவாய்ட் பண்ணனும்னாவது சொல்லித்தொலை..!!"
"நான் சொல்றேன்.. ஆனா அதை கேட்டுட்டு நீ சிரிக்க கூடாது..!!"
"ஐயோ.. சிரிக்கலைப்பா.. சொல்லு..!!"
"நீ நாளைக்கு காலேஜுக்கு போறப்போ.."
"ம்ம்.. காலேஜுக்கு போறப்போ..??"
"ஜட்டி போட்டுட்டு போகணும்..!!!"
"என்னது..?????" காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவனாய் நான் ஒரு முகச்சுளிப்புடனே கேட்டேன்.

"நீ ஜட்டி போட்டுட்டு போகணும்..!!!"
சீனியர் அழுத்தம் திருத்தமாக சொன்னார். அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பட்டென கால் கட்டாகி என் செல்போன் ஸ்க்ரீன் இருண்டது. ஐயையோ..!! என்ன இது..?? கால் ஏன் கட் ஆகிவிட்டது..?? சீனியர் கட் செய்தாரா..?? இல்லை வேறு ஏதும் ப்ராப்ளமா..?? எனக்கு எதுவும் புரியவில்லை..!! ஒரு அரை மணி நேரம் இருக்கும்.. நான் வெற்று ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். சீனியரிடம் இருந்து திரும்ப கால் வருமென்று காத்திருந்தேன். ஆனால் கால் வரவே இல்லை..!! காது வரை கிழியும் கொட்டாவியுடன் தூக்கம்தான் வந்தது..!! எந்தக்கவலையும் இல்லாமல் வாய் பிளந்தவாறு உறங்கிப் போனேன்.
காலையில் எழுந்த போதுதான் சீனியர் சொன்னது ஞாபகம் வந்தது. இன்று பிரச்னையான நாள் என்ற உண்மை உறைத்தது. என்ன பிரச்னை என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த பிரச்னையில் இருந்து தப்பிக்கும் உபாயம் என்னுடைய ஜட்டி என்பது மட்டும் தெரியும். என்னிடம் மொத்தம் ஐந்து ஜட்டிகள் உண்டு. ஐந்துமே VIP..!! ப்ளூ கலரில் ரெண்டு.. பிரவுன் கலரில்... சரி சரி.. அந்த டீட்டெயில் எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன்..!! அதில் ஏதாவது ஒன்றை இன்று அணிந்து செல்லவேண்டும்.. அவ்வளவுதான்..!! அதுதான் எனது இன்றைய லட்சியம்..!!
எங்கள் ரூமை ஒட்டியிருக்கும் பால்கனியில் ஒரு கொடி கட்டியிருப்போம். அதில்தான் துணிகளை எல்லாம் காயப் போடுவது. என்னுடைய ஜட்டிகள் எல்லாம் அங்குதான் தொங்கும். குளித்து முடித்து வெளியே வந்து, அந்த கொடியை பார்த்தவன் நிஜமாகவே ஷாக்காகி போனேன். நேற்று இரவு பெய்த பலத்த மழை அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது. என்னுடைய நான்கு ஜட்டிகள் மழையில் நனைந்து போய், தலை துவட்டி விட ஆளில்லாமல் ஈரமாக தொங்கிக் கொண்டிருந்தன. பொலபொலவென கண்ணீர் கொட்டியபடி பரிதாபமாக காட்சியளித்தன.
ச்சே..!! என்ன கொடுமை இது..??? ஈரத்துடன் இருக்கும் இவைகளை எப்படி அணிந்து செல்வது..??? நான் சில வினாடிகள் எரிச்சலும் சலிப்புமாய், என் ஈர ஜட்டிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நேற்று அணிந்து சென்ற ஜட்டியை, கல்லூரி முடிந்து வந்ததும், சேரில் கழட்டி வீசியது ஞாபகம் வந்தது. சீனியர் எச்சரித்திருக்கிறார்.. ஜட்டி அணிந்து செல்ல வேண்டும் என்று..!! அழுக்கு ஜட்டியாக இருந்தாலும் பரவாயில்லை.. அணிந்து செல்லலாம் என்று முடிவுக்கு வந்தேன்.
ஹாலுக்கு சென்றேன். நேற்று கழட்டிப்போட்ட அந்த சேரில் என் ஜட்டியை தேடினேன்.. தேடினேன்.. தேடினேன்... காணோம்..!!!! ஐயையோ.. என்ன இது..?? எங்கே போனது என் ஜட்டி..?? நேற்று இங்கேதானே கழட்டிப் போட்டேன்..?? அதற்குள் எங்கே சென்றிருக்கும்..?? ஒன்றுமே புரியவில்லை..!! ச்சை.. காலேஜுக்கு ஒரு ஜட்டி அணிந்து செல்வதில் இவ்வளவு கஷ்டமா..??
நான் உச்சபட்ச எரிச்சலில் இருக்கும்போதே, ஜானி அறைக்குள் நுழைந்தான். அவன் கையில் எங்கள் இருவருக்குமான காலை டிபன் பார்சல்..!! நான் எதையோ தேடிக்கொண்டிருந்ததை பார்த்தவன், பார்சலை தரையில் வைத்தவாறே ஆர்வமாக கேட்டான்.
"என்ன மச்சி தேடினு இருக்குற..?"
"என் ஜட்டிடா..!! நைட்டு இங்க கழட்டிப் போட்டேன்.. இப்போ காணோம்..!! எங்க போச்சுன்னு தெரியலை..!!"
"ஓ..!! அது உன் ஜட்டியா..??" அவன் இப்போது சற்றே ஷாக்கான மாதிரியான வாய்சில் கேட்டான்.
"ஆமாம்.. ஏன்.. பாத்தியா நீ..?"
நான் தேடுவதை விட்டுவிட்டு அவன் முகத்தை ஏறிட்டபடி கேட்டேன். அவன் இப்போது இனிமா குடித்த குரங்கு மாதிரி விழித்தான். அப்புறம் 'ஹிஹிஹி...' என அசட்டுத்தனமாய் ஒரு இளிப்புடன் சொன்னான்.
"ஸாரி மச்சி.."
"ஸாரியா..? எதுக்கு ஸாரி.."
"அது என் ஜட்டினு நெனச்சு எடுத்து போட்டுக்கினேன் மச்சி... கோவிச்சுக்காத..!!"
அவ்வளவுதான்...!! அப்போது மட்டும் என் கையில் ஒரு உருட்டுக்கட்டை இருந்திருந்தால், அவனை அடித்தே கொன்றிருப்பேன். அந்த அளவுக்கு அவன் மேல் ஆத்திரம்..!! இரண்டு வருடங்களாக இந்த நாயை ரூம் மேட்டாக வைத்துக் கொண்டு, இம்சையை தவிர வேறு ஏதாவது நான் அனுபவித்திருக்கிறேனா..? எங்கிருந்துதான் என் வாழ்வில் வந்து நுழைந்ததோ இந்த எடுபட்ட நாய்..!! ஆத்திரத்துடன் கத்தினேன்..!!
"த்தா..!! மானங்கெட்ட மடக்கூ...!! அறிவில்ல உனக்கு..? இத்தனை நாளா என் பேன்ட், ஷர்ட்லாம் எடுத்து போட்டுக்கிட்ட.. இப்போ ஜட்டியையும் போட ஆரம்பிச்சுட்டியா..?? கேடு கேட்ட கேனைக்கூ..!!"
"ஏன் மச்சி திட்டுற..? நான்தான் தெரியாம போட்டுட்டேன்னு சொல்றேன்ல..?"
"அப்டித்தாண்டா திட்டுவேன்.. அறிவுகெட்ட முட்டாக்கூ..!! சோத்தைத்தான திங்கிற..??" நான் கண்ணா பின்னாவென்று திட்ட ஆரம்பிக்க, இப்போது ஜானியும் கடுப்பானான்.
"என்ன மச்சி.. ரொம்ப ஓவராத்தான் திட்டுற..? இந்தா உன் ஜட்டி.. நீயே வச்சுக்கோ.. என்ஜாய் பண்ணு..!!"

சொன்னவன் பட்டென்று குனிந்து, லுங்கிக்குள் கைவிட்டு, என் ஜட்டியை அவிழ்த்து வீசினான். என் முகத்தை நோக்கி அந்த ஜட்டி பறந்து வர.. விஷ வாயு தாக்கிவிடக் கூடாதென்று.. விலகிக்கொண்டேன் நான் அவசரமாக..!! அவன் அவிழ்த்து வீசிவிட்டு, ஆத்திரத்துடன் அவனுடைய ரூமுக்குள் புகுந்து கொண்டான்.
நான் தலையை திருப்பி கீழே கிடந்த என் ஜட்டியை பார்த்தேன். ‘இப்படி செல்லக் கூடாத இடத்துக்கு சென்று வந்துவிட்டோமே’ என்று.. சோகமாக.. சுனங்கிப்போய்.. சுருண்டு கிடந்தது என் ஜட்டி..!! பார்க்கவே பரிதாபமாக இருந்தது..!! இனி இந்த ஜட்டியை வைத்து எப்படி என்ஜாய் செய்வது..? பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி ஈமச்சடங்குதான் நடத்த வேண்டும்..!!
அப்புறம் அன்று ஜட்டி அணியாமல்தான் காலேஜுக்கு சென்றேன். சில நேரங்களில் எனக்கு இந்த மாதிரி நேர்ந்திருக்கிறது... ஜட்டி அணியாமல் செல்வது..!! ஹிஹி...!! என்னவென்று எனக்கு சொல்ல தெரியவில்லை.. அன்றெல்லாம் எனக்கு ஒரு புதுவித உற்சாகமாக இருக்கும்..!! குளுகுளுவென.. ஜிலுஜிலுவென..!!
ஆனால்.. இன்று அந்த மாதிரி இல்லை..!! ‘சீனியரின் எச்சரிக்கையை மீறி ஜட்டி அணியாமல் வந்திருக்கிறேன். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ’ என்று ஒரு மனம் கவலைப்பட்டது..!! 'ஜட்டிதான..? அதனால என்ன பெருசா நடந்துடப் போகுது..?' என்று இன்னொரு மனம் கலாய்த்தது..!! எதற்கும் எச்சரிக்கையாய் இருக்கலாம் என்று.. எட்டியே இருந்தேன் லேகாவிடம் அன்று..!! மாலை வரை ஒரு பதைபதைப்புடனே நகர்ந்தது..!!
மாலை கல்லூரி முடிந்ததும், லேகாவிடம் கூட எதுவும் சொல்லிக் கொள்ளாமல், க்ளாஸ் விட்டு வெளியேறி, வேகமாய் நடையை போட்டேன். ரூமுக்கு சென்று முடங்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன், விறுவிறுவென நடந்தேன். கல்லூரி கேட்டை விட்டு வெளிய வந்தபோது, எனக்கு முன் என்னை மறித்தவாறு வந்து நின்றது அந்த ஸ்கூட்டி..!! லேகாதான்..!!! ஹெல்மட் க்ளாஸை ஏற்றிவிட்டபடி, உதட்டில் புன்னகையுடன் சொன்னாள்.
"என்னடா.. சொல்லாமக் கொள்ளாம கெளம்பிட்ட..?"
"அ..அது.. அது.. ஒண்ணுல்ல லேகா..!! சும்மாதான்..!!"
உன்னைக் கூட்டிட்டு வெளில போகலாம்னு நெனச்சேன்..!!"
"வெளிலயா..? எங்கே..?"
"பின்னால ஏறி உக்காரு.. போய்க்கிட்டே சொல்றேன்..!!"
"இ..இல்ல.. நீ எ..எங்கன்னு சொல்லு.."
"ப்ச்.. எங்கன்னு சொன்னாத்தான் வருவியா..? ஏறி உக்காருன்னு சொல்றேன்ல..?"
அவளுடைய அழகு முகம், இப்போது என்னை லேசாய் முறைக்க, எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு சில வினாடிகள் தயங்கினேன். அப்புறம் மெல்ல ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தேன். லேகா ஹெல்மட் க்ளாஸை இறக்கி விட்டுவிட்டு, ஆக்சிலரேட்டரை முறுக்கினாள். ஸ்கூட்டி சீறியது..!! ட்ராபிக் குறைவான தார்ச்சாலையில் விர்ர்ரென பறந்தது.
ஒரு அரைமணி நேரம் அந்த பயணம்..!! எங்கே செல்கிறோம் என்று அவள் சொல்லவே இல்லை..!! ஏடாகூடமாக ஒரு இடத்துக்கு கூட்டிச்சென்று.. எசகுபிசகாய் ஏதாவது செய்து விடுவாளோ..?? மனம் கிடந்து தவித்துக் கொண்டே வந்தது..!! எங்கே என சொல்ல மாட்டேன் என்கிறாளே..?? அவள் சொல்லாவிட்டால் என்ன.. செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லும்போது, தெரிந்துதானே ஆகவேண்டும்..? அரை மணி நேரம் முடிகையில் ஸ்கூட்டி அந்த ரெடிமேட் ஷோரூம் முன்பாக நின்றது..!! நான் சற்றே குழப்பமாக லேகாவை கேட்டேன்.
"இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க லேகா..?"
"ப்ச்..!! எதுக்குன்னு தெரியலையா..?"
"ம்ஹூம்.. தெரியலை..!!
"எனக்கு பர்த்டே ட்ரஸ் எடுக்குறதுக்கு அசோக்..!! நீதான் எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணனும்..!! இவ்ளோ நாளா என் பர்த்டேக்கு என் அம்மா செலக்ட் பண்ற ட்ரெஸ்தான் போட்டுப்பேன்..!! இந்த பர்த்டேக்கு என் அம்முக்குட்டி செலக்ட் பண்ற ட்ரெஸைதான் போட்டுக்கப் போறேன்..!!"
அவள் கொஞ்சும் குரலுடனும், மின்னும் கண்களுடனும், பொங்கும் காதலுடனும் சொல்ல.. நான் அப்படியே உருகிப் போனேன். ச்சே..!! என் மீது எவ்வளவு காதலாய் இருக்கிறாள்..?? இவளைப்போய் தவறாக நினைத்துவிட்டேனே.. ‘இவளால் என்ன பிரச்னை வரப் போகிறதோ’ என்று முட்டாள்த்தனமாய் தவித்தேனே..?? என் மீதே எனக்கு கோவம் வந்தது..!! நானும் இப்போது அவளிடம் காதலும், கனிவுமாய் சொன்னேன்.

"அதுக்கென்னடி செல்லம்..? செலக்ட் பண்ணிட்டா போச்சு..!! எவ்வளவு பட்ஜெட்..?"
"டூ தவுசண்ட்..!!"
"என்ன எடுக்கப் போற..? ஸாரியா..? சுடியா..?"
"சுடி..!!"
"சரி வா..!! உள்ள போகலாம்..!!"
உள்ளே சென்றோம். லேகா கைகட்டி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நான்தான் சுடிதார் எல்லாம் ஒவ்வொன்றாக புரட்டி புரட்டி பார்த்தேன். சேல்ஸ்மேனை நன்றாக வேலை வாங்கினேன்.. 'அதை எடுண்ணா .. இதை எடுண்ணா..' என்று..!! இருப்பதை எல்லாம் டேபிளில் அள்ளிப் போட்டுவிட்டு, அவனும் கடுப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு அரை மணி நேரத்துக்கும் மேல் செலவழித்து, அந்த கோல்ட் கலரில் அரக்கு பூவேலைப்பாடோடு கூடிய அந்த சுடிதாரை செலக்ட் செய்தேன். முகம் முழுதும் பிரகாசமாய் லேகாவிடம் காட்டினேன்.
"இந்த சுடி ஓகேவா லேகா..?"
"உனக்கு புடிச்சிருந்தா.. எனக்கு ஓகேதான்..!!" அவளும் மலர்ந்த முகத்துடன் சொன்னாள்.
"எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு லேகா.."
"அப்போ இதையே எடுத்துக்குறேன்..!!"
அந்த சுடிதாரை எடுத்துக் கொள்வதாக சொன்னதும், அந்த சேல்ஸ்மேன் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் வாங்கிக் கொண்டான். அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேக் செய்தவன்,
"வேற என்ன சார்..?" என்றான். 'அவ்வளவுதான்..' என்று நான் சொல்ல வாயெடுக்கும் முன்பே,
"ஜென்ட்ஸ் ரெடிமேட் செக்ஷன் எங்க இருக்கு..?" கேட்டாள் லேகா.
"செகண்ட் ஃப்ளோர் மேடம்..!!" அந்த ஆள் சொல்லிவிட்டு நகர, நான் எதுவும் புரியாமல் லேகாவை பார்த்தேன்.
"என்னடா பாக்குற..? என் பர்த்டேக்கு நான் மட்டும் புது ட்ரஸ் போட்டா போதுமா..? வா.. உனக்கும் எடுக்கலாம்..!!"
"எனக்கு எதுக்கு லேகா.. அதுலாம் வேணாம்..!!"
"ப்ச்..!! அப்டிலாம் சொல்லக்கூடாது..!! கண்டிப்பா வாங்கணும்..!! எனக்கு நீ செலக்ட் பண்ணினேல.. வா.. உனக்கு நான் செலக்ட் பண்றேன்..!!"
செகண்ட் ப்ளோர் சென்றோம். மேலும் ஒரு அரை மணி நேரம் ஆனது. இந்த முறை லேகா செலக்ட் செய்ய, நான் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தேன். ஒரு ரெட் கலர் டி-ஷர்ட்டும், ப்ளூ கலர் ஜீன்சும் செலக்ட் செய்தாள். எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. ஃபிட்டிங் சரியாக இருக்கிறதா என்று பார்க்க நினைத்தேன். டி-ஷர்ட்டையும், ஜீன்சையும் எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூமுக்கு நடந்தோம். லேகா வெளியே நின்று கொள்ள, நான் அந்த ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன்.
ஏற்கனவே அணிந்திருந்த சட்டையையும், பேன்ட்டையும் கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு, 'ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்..' ஆக நின்றேன். புதிதாக வாங்கிய டி-ஷர்ட்டை எடுத்து அணிந்து கொண்டேன். உள்ளே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தேன். கச்சிதமாக, நன்றாக இருந்தது. புது ஜீனை எடுத்து மாட்டிக்கொண்டேன். அதுவும் கரெக்ட் ஃபிட்டாக இருந்தது..!! முன்புறமும் பின்புறமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டேன். திருப்தியாக இருந்தது..!!
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது..!! புது உடையில் ஜொலித்த என் உருவத்தை கண்ணாடியில் பார்த்து புன்னகைத்தவாறே, சந்தோஷமும் பெருமிதமுமாய் 'சரக்க்க்க்...!!' என பேன்ட் ஜிப்பை கீழிருந்து மேலாக நான் இழுக்க..... 'ஆஆஆஹ்ஹ்ஹ்க்க்க்..!!'........... ஜிப்பின் கரடுமுரடான பற்களுக்கு இடையில், என் ஆணுறுப்பின் மென்மையான மேல்த்தோல் சென்று எசகுபிசகாய் சிக்கிக் கொண்டது..!! அவ்வளவுதான்..!! குபுக்கென்று ஏதோ ஒன்று வந்து என் தொண்டையை அடைப்பது மாதிரி இருந்தது. முணுக்கென என் கண்களில் கண்ணீர் பூத்துக் கொண்டன. சுருக்கென ஒரு வலி என் ஆணுறுப்பில் ஆரம்பித்து, அங்கமெல்லாம் பரபரவென பரவியது.

"ஆஆஆஆஆஆ...!!!!!!!!!!!!"
என்று வலி தாங்க முடியாமல் கத்திவிட்டேன். அவ்வளவுதான்..!! 'பட்.. பட்.. பட்.. பட்..' என ட்ரயல் ரூம் கதவு தட்டப்பட்டது. பதட்டமான குரலில் லேகா அழைத்தாள்.
"அசோக்... அசோக்... என்னாச்சு..?"
"ஒ..ஒண்ணுல்ல லேகா.." நான் வலியை சமாளிக்க பற்களை கடித்துக்கொண்டு கத்தினேன்.
"அப்புறம் ஏன் கத்துன..? கதவை தெற.."
"அ..அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..?"
"ப்ச்.. இப்போ கதவை தெறக்க போறியா இல்லையா..? தெறன்னு சொல்றேன்ல..?"
லேகா பொறுமையில்லாமல் கத்தவும், நான் ஒருகையால் கீழே பிடித்துக்கொண்டு, இன்னொரு கையை மேலே உயர்த்தி தாழ்ப்பாளை இறக்கினேன். லேகா பதறிப்போனவளாய் உள்ளே வந்தாள்.
"என்னடா.. என்னாச்சு... ஏன் கத்துன..?"
"ஒண்ணுல்ல லேகா.. ஜிப் போட்டேன்.. அ..அது மாட்டிக்கிச்சு..!!"
நான் வெட்கம் பிடுங்கித் தின்னும் குரலில் சொல்ல, இப்போது அவளுக்கும் வெட்கத்தில் முகம் சிவந்து போனது. 'ஐயோ.. ச்சீய்..' என்றவாறு நாணத்துடன் முகத்தை சுருக்கியவாறு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அப்புறம் மெல்ல ஓரக்கண்ணால் பார்த்தாள்.. என்னையும், பின்னர் என் இடுப்புக்கு கீழும்..!! சற்றே கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.
"எடுத்துட்டியா..? வந்துடுச்சா..?"
"இல்ல லேகா.. முடியலை.. கஷ்டமா இருக்கு.. வலிக்குது.."
"சரி இரு.. நான் எடுத்து விடுறேன்.." சொன்னவள் பட்டென என் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.
"ஐயோ.. ச்சீய்.. வேணாம் லேகா.." நான் வெட்கமும், பதட்டமுமாய் சொன்னேன்.
"ஏன்..???"
"எ..எனக்கு வெட்கமா இருக்கு.."
"ப்ச்.. இதுல என்ன இருக்கு..? என்னைக்காவது ஒருநாள்.. எல்லாத்தையும் நான் பாக்கத்தானே போறேன்..??"
அவள் போதை ஏறிய விழிகளுடனும், கிறக்கமான குரலிலும் சொல்ல, என்னால் அதற்கு மேல் அவளை தடுக்க இயலவில்லை. ஒரு கையை மெல்ல நீட்டி, திறந்திருந்த கதவை மூடி தாழ்ப்பாள் போட்டேன். லேகா என் இடுப்புக்குக் கீழே கை வைத்தாள். லேசாக துணியை விலக்கி, ஜிப்பை பற்றினாள். சற்றே கிண்டலான குரலில் கேட்டாள்.
"ஏண்டா.. ஜட்டி போடுற பழக்கம்லாம் இல்லையா..? டெயிலி இப்படித்தான் காலேஜுக்கு வந்துட்டு இருக்கியா நீ..?"

"ச்சேச்சே...!! டெ..டெயிலிலாம் இல்ல லேகா.. இன்னைக்குத்தான்.. ஏதோ.. அ..அவசரத்துல.." நான் உளற,
"சரி சரி.. விடு..!!"
அவளுடைய மென்மையான கை விரல்கள் எனது அந்தரங்க பகுதியில் ஊர்ந்ததே, எனக்குள் ஒரு அபரிதமான சுகத்தை கிளறி விட்டிருந்தது. ஜிப்புக்குள் சிக்கியதால் உண்டான வலி.. இப்போது எங்கே ஓடிப்போனது என்றே தெரியவில்லை..!! லேகா மெல்ல ஜிப்பை பிடித்து கீழே இழுக்க.. மிக மிக இதமாக.. என் ஆணுறுப்பு அந்த கொடிய ஜிப்பின் கோரப்பிடியில் இருந்து மீண்டது..!!
லேகா அதன் பிறகும் எந்திரிக்காமல் அப்படியே சில வினாடிகள் அமர்ந்திருந்தாள். அவளுடைய பார்வை என் இடுப்புக்கு கீழேயே பதிந்திருந்தது.. மிக கூர்மையாக..!! ஜிப் திறந்த இடைவெளியின் வழியாக.. விறைத்து நின்ற என் ஆண்மையின் அழகைத்தான்.. அத்தனை ஆர்வமாக அவள் பார்க்கிறாள் என்று நான் அறிந்ததும்.. ஒரு புதுவித வெட்கம் என்னை வந்து பற்றிக் கொண்டது..!! கூச்சத்தில் நெளிந்தவன், அவள் குறுகுறுவென பார்த்த அந்த ஏரியாவை, என்னுடைய வலது கையால் பொத்திக் கொண்டேன்.
இப்போது லேகா நிமிர்ந்தாள். லேசாக ஒரு வெட்கப் புன்னகையை சிந்தினாள். எழுந்தாள். ஒருவித ஏக்கமும் காதலுமாய் என் கண்களை நோக்கினாள். அவளுடைய இமைகளும், உதடுகளும் ஒருமாதிரி படபடவென அடித்துக் கொண்டன. ஒரு சில வினாடிகள் அப்படியே என்னை பார்த்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.
"சரி அசோக்.. ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.."
சொன்னவள், தாழ்ப்பாளை திறக்க சென்றாள். திறக்க சென்றவள், திடீரென என்ன நினைத்தாளோ..?? பட்டென திரும்பி படாரென என் மீது பாய்ந்தாள். அவளுடைய நெஞ்சுக்கனிகள் 'நச்ச்ச்ச்..!!' என்று என் மார்பை முட்ட, அவளுடைய உதடுகள் 'பச்ச்சக்க்...!!' என்று உதட்டில் வந்து ஒட்டிக்கொண்டன. என்னுடைய தடித்த இதழ்கள், அவளுடைய பட்டு இதழ்களுக்குள் எசகு பிசகாய் சிக்கிக்கொள்ள, அவளோ ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தாள். என்னுடைய உதட்டு ஈரத்தை எல்லாம் உறிஞ்சிக் குடித்திட வேண்டும் என்ற வெறி பிடித்தவள் மாதிரி..!!
அவளுடைய அந்த ஆவேசத்தை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. சத்தியமாய் சொல்கிறேன்.. மிரண்டு போயிருந்தேன். நாங்கள் இதுவரை பல முறை முத்தமிட்டிருக்கிறோம். ஆனால் அந்த முத்தத்தில் எல்லாம் மென்மையாக.. காதல் கொஞ்சுவதாக இருக்கும்..!! இந்த முத்தம் வேறு மாதிரி..!! கட்டுக்கடங்காத காமமே பொங்கி வழிந்தது..!!
லேகா மிதமிஞ்சிய காமத்தில் இருந்தது அவளுடைய முத்தத்தில் தெளிவாக தெரிந்தது. எனது உதடுகளை படுவேகமாக சுவைத்தவள், பின்பு தனது நாக்கை எனது வாய்க்குள் மெல்ல நுழைத்து, என் நாக்கை தேடினாள். தனது நாவால் எனது நாக்கை தடவிக் கொடுத்தாள். எங்கள் இருவரது எச்சில்களும் ஒன்றோடொன்று கலந்து கொண்டிருக்கும்போதே, அவளுடைய உதடுகளால் எனது நாக்கை படக்கென கவ்வி, 'சர்ர்ர்ர்...' என உறிஞ்சினாள்.
அவ்வளவுதான்..!! ஜிவ்வென இரு காம ஊற்று சரசரவென எனக்குள் ஊறியது..!! என் உடலெங்கும் குபுகுபுவென ஓடி கொப்பளித்தது..!! காமபோதை உச்சந்தலை வரை கிர்ரென ஏற, எனது வலது கை என் கட்டுப்பாடின்றியே உயர்ந்தது.. லேகாவின் மார்பகம் நோக்கி நகர்ந்தது... தொட்டது... தடவியது... பற்றியது... 'பாம்.....!!!!!!!!' என்று அழுத்தி ஹாரன் அடித்தது..!!
"ஆஆஆஆஆவ்...!!!"
லேகா ஒரு வினோத ஒலியுடன், அவ்வளவு நேரம் உறிஞ்சிக்கொண்டிருந்த என் நாக்கை பட்டென ரிலீஸ் செய்தாள். உதடுகளை 'ஓ'வென்று திறந்து வைத்தவாறு, அதிர்ச்சியாய் என் முகத்தையே பார்த்தாள். அவளுடைய விழிகளும் அகலமாய் விரிந்து கொண்டன. சில வினாடிகள்..!! அப்புறம் முகத்தை மெல்ல திருப்பி, அவளுடைய கொங்கையை கொத்தாகப் பற்றியிருந்த எனது கரத்தை பார்த்தாள். அவளுடைய மென்மையான மார்புச்சதைகளை, நான் முரட்டுத்தனமாய் பற்றியிருந்தது அவளுக்குள் வலியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவஸ்தையாய் முனகினாள்.
நான் இப்போது மெல்ல என் கை அழுத்தத்தை குறைத்தேன். விரல்களை விரித்தேன். அவளுடைய மார்பில் இருந்த என் கையை, கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கிக் கொண்டேன். அத்தனை நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சினை, லேகா இப்போது தாராளமாக வெளியிட்டாள். அத்தனை நேரம் என் பிடியில் சிக்கி கசங்கிய, அவளது மார்பு இப்போது சீராக மேலும் கீழும் ஏறி இறங்கியது.
லேகா மெல்ல தன் முகத்தை நிமிர்த்தி என்னை பார்த்தாள். அவளுடைய கண்களில் ஒருவித குறும்பு மின்னியது..!! அவளுடைய உதடுகளில் ஒருவித வெட்கம் சிந்தியது..!! தனது வெண்முத்து பற்கள் வெளியே தெரியுமாறு மெலிதாக புன்னகைத்தாள். கிறக்கமான குரலில் கிசுகிசுப்பாக கேட்டாள்.
"கிஸ் நல்லாருந்ததா..?"
"ம்ம்ம்..." நான் இன்னும் முத்த போதை தீராமலே சொன்னேன்.
"ட்ரஸ் பண்ணிட்டு வெளிய வா.."
சொல்லிவிட்டு அவள் தாழ்ப்பாள் திறந்து வெளியேறினாள். நான் உடலில் ஏறியிருந்த கிறக்கம் இறங்கும் வரை, அப்படியே கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்புறம் அவசர அவசரமாய் உடை மாற்றிக் கொண்டேன். இந்தமுறை ஜிப் போடும்போது.. மிகவும் கவனமாக.. அதிக சிரத்தையுடன்.. ஒரு பத்து வினாடிகளுக்கு பக்கமாக எடுத்துக் கொண்டேன்..!! வெற்றிகரமாக ஜிப் மாட்டிக்கொண்டேன்..!! ஹிஹி...!!!
இருவருடைய ட்ரசுக்கும் லேகாவே பில் பே பண்ணினாள் (உங்களுக்கே தெரிந்திருக்கும்.. இருந்தாலும் சொல்லுவது கதை சொல்லும் எனது கடமை..!!). வழக்கம்போல் லேகாவே என் ரூம் வரை வந்து என்னை ட்ராப் செய்தாள். வழக்கமாய் தரும் பறக்கும் முத்தம் இன்று இல்லை.. வெட்கமும், குறும்பும் சரிசமமாக கலந்த ஒரு புன்னகையை சிந்திவிட்டு, விடை பெற்று சென்றாள். நான் படியேறி ரூமுக்கு சென்றேன்.
ட்ரையல் ரூமுக்குள் நடந்த மேட்டரே என் மனமெங்கும் அடைத்திருந்தது. அவளுடைய முத்த ஈரம் என் உதட்டை விட்டு போக மறுத்தது என்றால்.. அவளுடைய மெத்தென்ற மென்மை என் கையை விட்டு அகல மறுத்தது..!! மனமும் கள் குடித்த வண்டாய்.. திரும்ப திரும்ப அந்த சம்பவத்திலேயே சென்று அமர்ந்தது..!! ச்சே..!! ஜட்டி போடாமல் சென்றால் ஏதோ பிரச்னை வரும் என்று சொன்னானே அந்த லூசு சீனி..!! என்ன ஒரு குஜால் மேட்டர் நடந்திருக்கிறது..?? ஹையோ.. நினைத்து நினைத்து பார்க்கவே எவ்வளவு குஷியாக இருக்கிறது..??

அன்று மாலை முழுதும் நான் ஒரு பைத்தியக்காரன் மாதிரியே சுற்றினேன்..!! டிவி போட்டுக்கொண்டு, சன் மியூசிக்கில் வந்த காதல் பாடல்களுக்கு தப்புத்தப்பாய் ஹம் செய்தேன்..!! காலையில் ஜானி மீது இருந்த கோபம் இப்போது காணாமல் போயிருந்தது. 'நம்மலாம் அப்படியா மச்சி பழகிருக்கோம்..?' என்று அவனை சமாதானம் செய்தேன். 'இன்னைக்கு ஒரு செம மேட்டர் நடந்தது மச்சி..' என்று அவனுக்கு ஆர்வத்தை கிளப்பி விட்டேன். 'என்ன மச்சி அது.. சொல்லுடா..' என்று அவன் இளித்தபோது, 'போடா வெண்ணை.. சொல்ல முடியாது போ..' என்று அவனை வெறுப்பேத்தினேன்.
அன்று இரவு சீனியரிடம் இருந்து கால் வந்தபோது கூட, ஆரம்பத்தில் நான் கவனிக்கவில்லை. அப்புறம் கவனித்தபிறகு அவசர அவசரமாய் என் செல்போனை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினேன். வீடியோ காலுக்கு ஓகே பட்டன் அழுத்தினேன். எடுத்ததுமே சற்று எரிச்சலாய் சீனியரிடம் கேட்டேன்.
"ஏன் சீனி.. நேத்து என்னாச்சு.. பாதில ஓடிப் போயிட்ட..?"
"இங்க திடீர்னு பவர் கட் பா.. அதான்..!!"
"பவர் கட்டா..? அங்கயுமா..?? ச்சை..!!" நான் நொந்துபோன குரலில் சொன்னேன்.
"அது சரி.. நீ மேட்டருக்கு வா..!! இன்னைக்கு என்ன ஆச்சு..??" அவர் கேட்க, எனக்கு உடனே குப்பென்று ஒரு வெட்கம் வந்து அப்பிக் கொண்டது.
"போயா சீனி..!!! அதெல்லாம் போய் கேட்டுக்கிட்டு..!!" என்றேன் வெட்கத்துடனே.
"என்ன... அட என்ன... அட என்னாச்சு...??" அவர் கவுண்டமணி ஸ்டைலில் கேட்டார்.
"எனக்கு ஒரே வெட்கமா இருக்குதுயா சீனி..!!"
"அட என்னாச்சுன்னு சீக்கிரம் சொல்லுப்பா..!! நீ வெட்கப்படுறதை பாத்தா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!!"
"என்ன ஆச்சா..?? என்னென்னவோ ஆகிப்போச்சுயா சீனி..!!"
"அடச்சை.. சொல்லு..!!"
"லே..லேகாவும் நானும் ட்..ட்ரஸ் எடுக்க போனோமா..?" நான் வெட்கத்துடன் தயங்கி தயங்கி சொன்னேன்.
"ம்ம்ம்... மேல..." அவர் கடுப்புடன் கேட்டார்.
"எனக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் எடுத்து கொடுத்தா..!! அதை ட்ரையல் ரூம் போய் போட்டுப் பாத்துக்க போனேனா..??"
"அதைத்தான் நான் டைரியிலேயே படிச்சுட்டேனே..? அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லு..!!"
"ஜிப் மாட்டுறப்போ என் சக்கரை மாட்டிக்கிச்சு.."
"அச்சச்சோ.. அது எப்படி மாட்டுச்சு..?? நான்தான் உன்னை ஜட்டி போட்டுட்டு போக சொன்னேனே..? போட்டுட்டு போனியா.. இல்லையா..?"
"ஸாரி சீனி..!! இந்த ஜானிப்பய சதி பண்ணிட்டான்.. ஜட்டி போடாமத்தான் இன்னைக்கு போனேன்..!!"
"ஐயையோ... தப்பு பண்ணிட்ட ஜூனி..!! அதுசரி.. சக்கரை மாட்டுனதும் நீ எதுவும் வலில கத்திடலையே..?" சீனியர் இப்போது பதறிப் போனவராய் கேட்டார்.

"இல்லை.. க..கத்துனேன்.." நான் எதுவும் புரியாமல் குழப்பமாய் சொன்னேன்.
"கத்துனதை கேட்டு அவள் உள்ள வரலையே..??"
"இல்லை.. வந்தாளே..??"
"உன்னை கிஸ் பண்ணலையே..?"
"இல்லை சீனி.. கிஸ் பண்ணினா..!!"
"ஐயோ ஐயோ.. ராமா ராமா...!!!! ச்சே..!!!!!!! சரி சரி.. அவ கிஸ் பண்ணினா.. அவ்ளோதான..?? அதுக்கு மேல எதுவும் நடக்கலையே..? நீ எதுவும் பண்ணிடலைல..??"
"இ..இல்ல சீனி... நா..நான்..." நான் இழுக்கவும் சீனியருக்கு புரிந்து போயிருக்க வேண்டும்.
"அமுக்கிட்டியா..????" என்றார் அதிர்ச்சியான குரலில்.
"ஆ..ஆமாம் சீனி..!!!!" நான் ஒத்துக்கொண்டேன்.
"அடப்பாவி ஜூனி...!!!! நான் என்ன சொன்னேன்.. நீ என்ன பண்ணிட்டு வந்திருக்குற..??"
"நீ என்னய்யா சொன்ன..? நீதான் ஒண்ணுமே சொல்லலையே..??"
"அதான் ஜட்டி போட்டுட்டு போக சொன்னனே..?"
"அதான் ஜானி சதி பண்ணிட்டான்னு சொன்னேனே..?"
"போடா ஜூனி..!!! நான்தான் கேனையனா இருந்தேன்னா.. நீ என்னை விட கேடு கெட்ட கேனையனா இருக்குற..??"
"என்னாச்சு சீனி..?? ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..??"
"டென்ஷன் ஆகாம என்ன பண்ண சொல்ற..?" சீனியர் உச்சபட்ச கடுப்பில் கத்த,
"சரி.. அதை விடு..!! நேத்து என்னமோ.. நான் இன்னைக்கு ஜட்டி போடாம போனா.. எனக்கு பேராப்பு வர்றதுக்கு புள்ளையார் சுழி போடுற மேட்டர் நடக்கும்னு சொன்னியே..? அப்டிலாம் ஒன்னும் நடக்கவே இல்லையே..??" நான் கூலான குரலில் குழப்பமாய் கேட்க,
"ஐயோ.. ஐயோ...!!! வரப்போற பேராப்பு என்னன்னு கூட புரியாத.. பேப்பயலா இவன் இருக்கானே..??? இவனை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..???" என்று ஒப்பாரி வைப்பது மாதிரி சீனியர் புலம்ப ஆரம்பித்தார்.

